மீண்டும் ஒரு புலி பயங்கரம்... டெல்லியைத் தொடர்ந்து உ.பியில் புலியிடம் சிக்கி இறந்த சிறுவன்
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் 10 வயது சிறுவனை புலி ஒன்று கடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசம் மாநிலம் பிஞ்னோர் மாவட்டத்தில் வனப் பகுதியை ஒட்டி குடியிறுப்புப் பகுதி அமைந்துள்ளது. அப்பகுதியில், இன்று காலை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான் 10 வயது சிறுவன் ஒருவன். அப்போது வனப் பகுதியில் இருந்து ஓடி வந்த புலி ஒன்று அச்சிறுவனைக் கடித்துள்ளது.

இதில், அச்சிறுவன் பலத்த காயமடைந்தான். அதற்குள்ளாக சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அப்பகுதி மக்கள், கம்பு மற்றும் கல் கொண்டு அப்புலியை விரட்டினர். இதனால், தாக்குதலுக்குப் பயந்து அச்சிறுவனை விட்டு விட்டு காட்டுக்குள் ஓடிச் சென்று மறைந்தது அப்புலி.
ஆனால், அதற்குள்ளாக அதிக இரத்தப் போக்கினால் அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டெல்லி உயிரியல் பூங்காவில் மாணவர் ஒருவரை வெள்ளைப் புலி கடித்துக் கொன்ற சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை உண்டாக்கியது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புலியிடம் சிக்கி இன்னொரு உயிர் பறி போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications