லாலு - நிதிஷ் சண்டை முற்றியது எப்படி.. இப்படிதான்
பிகார் முதல்வர் நிதிஷ் குமார் ராஜினாமா செய்யும் அளவிற்கு லாலுவுடன் ஏற்பட்ட சண்டையின் படிப்படி அம்சங்கள் இதோ..
பாட்னா: பிகாரின் முன்னாள் முதல்வர் நிதிஷ் குமாருக்கும் அவருடன் கூட்டணி வைத்திருந்த ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவிற்கு நடந்த சண்டையின் சிலவற்றின் கால வரிசை இதோ..

• 9 நவம்பர் 2016 - கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கு என்று கூறி மோடியால் கொண்டு வரப்பட்ட பண மதிப்பு நீக்கத்திற்கு நிதீஷ் வரவேற்பு. லாலு இதற்கு கடும் எதிர்ப்பு
• 26 மே 2017 - எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான விவாதிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நிதிஷ் குமாரை அழைத்தார். அந்த அழைப்பை நிதிஷ் நிராகரித்தார்.
• 27 மே 2017 - பிரதமர் மோடியுடன் நிதிஷ் குமார் டெல்லியில் சந்திப்பு மற்றும் விருந்தில் பங்கேற்பு
• 21 ஜூன் 2017 - நிதிஷ் குமார், பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளர் ராம்நாத் கோவிந்துவை ஆதரித்து அறிவிப்பு
• ஜூலை 7 2017 - ஊழல் தொடர்பாக, 5 நகரங்களில் லாலுவிற்கு சொந்தமான 12 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்றது. துணை முதல்வராக உள்ள லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் குற்றவாளி என சிஐபி கூறியது.
• ஜூலை 24 - ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள லாலுவின் மகன் தேஜஸ்வி பதவி விலக நிதிஷ்குமார் ஜூலை 28ம் தேதி வரை கெடு,
• ஜூலை 26 - என் மகன் தேவஸ்வி பதவி விலக மாட்டான் என்றார் லாலு.
• ஜூலை 27 - பிகார் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் நிதிஷ் குமார்.












Click it and Unblock the Notifications