For Daily Alerts
Just In
திருப்பதி வனப்பகுதியில் காட்டுத் தீ.... போராடி அணைத்த வனத்துறை - வீடியோ
திருப்பதி அருகே கரிகொண்டா என்னும் வனப்பகுதியில்காட்டுத்தீ பரவியது. வனத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததால், அது மேலும் பரவாமல் சேதம் தவிர்க்கப்பட்டது.
திருப்பதி: திருப்பதி அருகே வனப்பகுதியில் காட்டுத்தீ மளமளவென பற்றி எரிந்தது. தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.
திருப்பதி அருகே கரிகொண்டா வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. இதனால் அந்த வனப்பகுதியில் இருந்த மரங்கள், செடிகள் பற்றி எரிந்தன. கோடைகாலம் என்பதால் தீ, இயல்பாக பரவும் வேகத்தை விட மிக அதிகமான வேகத்தில் பரவியதால் பயங்கர காட்டுத் தீ ஏற்படும் அபாயம் இருந்தது.
ஆனால், தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் போராடி தீயை அணைத்தனர். ஆனால் தீ எப்படி பரவியது என வனத்துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. காட்டுத் தீ உருவானதை வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English summary
In Tirupati forest, karikonda region forest area got fire and it was saved in time by forest officers.
Story first published: Monday, June 5, 2017, 16:02 [IST]