Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பு எதுவும் இல்லை.. உறுதி செய்த சிபிஐ! குற்ற பத்திரிக்கையில் தகவல்

Subscribe to Oneindia Tamil

அமராவதி: திருப்பதி லட்டு கலப்படம் தொடர்பான வழக்கின் இறுதிக் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதில் லட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் கலப்படம் செய்திருப்பது உண்மை தான் என்றாலும் அதில் மாட்டுக் கொழுப்பு அல்லது வேறு எந்தவொரு கொழுப்பும் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 16 மாதங்களுக்கு முன்பு, 2024இல், ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோர் புனிதமான திருப்பதி லட்டு விலங்கு கொழுப்பால் கலப்படம் செய்யப்படுவதாகக் குற்றஞ்சாட்டியது தேசியளவில் பரபரப்பானது.. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து, 2024 அக்டோபரில் வழக்கு குறித்து விசாரிக்க சிபிஐ சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

Tirupati Laddu Ghee controversy CBI Finds Synthetic Material No Beef Tallow says in chargesheet

மாட்டுக் கொழுப்பு இல்லை

அதன்படி வழக்கை விசாரித்த சிபிஐ இப்போது குற்றப்பத்திரிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. அதில் நெய்யில் கலப்படம் இருந்தாலும் மாட்டுக் கொழுப்பு எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 முதல் 2024 ஆம் ஆண்டு வரை லட்டு பிரசாதம் தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு அல்லது வேறு எந்த விலங்கு கொழுப்பும் இல்லை என்பதை இந்த அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. நெல்லூரில் உள்ள ஊழல் தடுப்புப் பிரிவு நீதிமன்றத்தில் ஜனவரி 23ம் தேதி இந்தக் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது.

சிபிஐ குற்றப்பத்திரிகையின்படி, லட்டு தயாரிப்பிற்காகப் பயன்படுத்தப்பட்ட நெய், உண்மையில் தாவர எண்ணெய்கள் மற்றும் பால் பொருட்களின் பண்புகளை ரசாயன ரீதியாகப் பிரதிபலிக்கும் ஆய்வக எஸ்டர்களுடன் கலப்படம் செய்யப்பட்டது. இதில் விலங்கு கொழுப்பு பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் இல்லை. உத்தரகாண்ட்டின் பகவான்ப்பூரில் உள்ள போலா பாபா ஆர்கானிக் டைரி நிறுவனம் விர்ச்சுவல் உற்பத்திப் பிரிவாகச் செயல்பட்டது அம்பலமானது.

போலி நெய்

இந்த போலா பாபா டைரி, 2019 முதல் 2024ஆம் ஆண்டு வரை தனது மையத்தில் பால் அல்லது வெண்ணெய் கொள்முதல் செய்யாமலேயே, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்குக் குறைந்தது 68 கிலோ நெய்யை விநியோகித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பால் கூட பயன்படுத்தப்படாமல் செயற்கையாகத் தயாரிக்கப்பட்ட இந்த நெய்யின் மதிப்பு சுமார் 250 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கெமிக்கல்கள்

இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமான FSSAI மேற்கொண்ட ரசாயன ஆய்வில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தரக்கட்டுப்பாட்டு விதிகள் எப்படி மீறப்பட்டன என்பது கண்டறியப்பட்டது. நெய்யின் தூய்மையைச் சரிபார்க்கக் கோயில் நம்பியிருந்த ரீச்செர்ட்-மெய்சல் (RM) டெஸ்ட்டை ஏமாற்ற, பாமாயில், பனை கர்னல் எண்ணெய், பாமோலீன் ஆகியவை பயன்படுத்தப்பட்டன. கொல்கத்தாவைச் சேர்ந்த பட்ஜ் பட்ஜ் கோ லிமிடெட் நிறுவனத்திடமிருந்து இதை வாங்கியுள்ளனர். நெய்யின் தங்க மஞ்சள் நிறத்திற்காக பீட்டா கரோட்டின் சேர்க்கப்பட்டதோடு, நெய்யின் அசல் வாசனையைப் பிரதிபலிக்கச் செயற்கை சுவையூட்டிகளும் பயன்படுத்தப்பட்டன.

விலங்கு கொழுப்பு எதுவும் இல்லை

2024இல் சந்திரபாபு நாயுடு "எஸ்-வேல்யூ" மாறி இருப்பதைச் சுட்டிக்காட்டியே விலங்கு கொழுப்பு இருப்பதாகக் கூறியிருந்தார். இருப்பினும், தாவர எண்ணெய்களும் ரசாயன எஸ்டர்களும் தான் எஸ் வேல்யூ மாற காரணம் என்றும் விலங்கு திசுக்கள் இல்லை என்றும் குற்றப்பத்திரிகை தெளிவுபடுத்துகிறது.

இந்த நெய் கலப்பட விவகாரத்தில் 36 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் பொது மேலாளர் (கொள்முதல்) சுப்பிரமணியம் முக்கிய குற்றவாளியாகக் குறிப்பிடப்பட்டுள்ளார். கருப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட நிறுவனத்திடமிருந்து வந்த ஒப்பந்தங்களுக்கு வேண்டும் என்றே ஒப்புதல் அளித்ததாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. பண்ணை நிபுணர் விஜய பாஸ்கர் ரெட்டி, தேவஸ்தான தலைவரின் முன்னாள் உதவியாளர் சின்னா அப்பன்னா மற்றும் போலா பாபா நிறுவனத்தின் இயக்குநர்களான போமில், விபின் ஜெயின் ஆகியோரும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+