For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாம்பாற்றின் குறுக்கே அணை: கேரளாவிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: பாம்பாற்றின் குறுக்கே கேரளா அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று மனு தாக்கல் செய்துள்ளது.

கேரள மாநிலம் பட்டிசேரியில் 2 டிஎம்சி நீரைத் தேக்கிவைக்கும் வகையில் பாம்பாற்றின் குறுக்கே ரூ.26 கோடியில் அணை கட்ட அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியானது. இதற்கு தமிழகத்தில் உள்ள விவசாயிகளும், அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

TN files petition in SC against Kerala's Pamabaru dam plan

திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அமராவதி அணையானது 1959ல் கட்டப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையில், கேரள மாநிலத்திற்கு உட்பட்ட மூணாறு பகுதியில் பெய்யும் மழை நீரானது, பாம்பாற்றின் வழியாக அமராவதி அணைக்கு வந்து சேர்கிறது. அமராவதி அணையின் மூலம் பழைய, புதிய ஆயக்கட்டு பகுதிகள் 63 ஆயிரத்து 500 ஏக்கர் பாசனம் பெற்று வருகிறது.

இதில் பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக அமராவதி ஆற்றில் உள்ள 15 தடுப்பணைகள் மூலமாக 25 வாய்க்கால்கள் வழியாக தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஒரு போக சாகுபடிக்கு 18 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும் நிலையில், அணைக்கு தற்போது 12 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே கிடைத்து வருகிறது. இதனால் தலைமடையைத் தவிர மற்ற பகுதிகளில் ஒரு போக சாகுபடிக்கே தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இது தவிர அமராவதி ஆற்றில் திருப்பூர், கரூர் மாவட்டங்களுக்கு உட்பட்ட கிராம பகுதிகளுக்கு 25க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. வறட்சி காலங்களில் இத்திட்டங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல், குடிநீர் பற்றாக்குறையும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரள அரசு அமராவதியின் முக்கிய நீராதாரமான பாம்பாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட முடிவு செய்து, பணிகளை துவக்கி உள்ளது.

பாம்பாற்றின் குறுக்கே அணை கட்டி, அமராவதி அணைக்கு வரும் தண்ணீரை தடுத்தால் பாசனப்பகுதிகள் அழிந்து போவதோடு, குடிநீர் கிடைக்காமல் பல லட்சம் மக்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்பது தமிழக மக்களின் அச்சம். எனவே கேரளா அரசு அணை கட்டுவதை தடை செய்யவேண்டும் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், பிரதமர் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் மனு

இந்த நிலையில் பாம்பாற்றின் குறுக்கே கேரள அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் உமாபாரதி இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இடுக்கி மாவட்டம் பட்டிசேரிப்பட்டியில் பாம்பாற்றின் கேரள அரசு குறுக்கே தடுப்பணை கட்டவுள்ளது. இந்த தடுப்பணை கட்டப்பட்டால் தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்துவிடும் . எனவே கேரள அரசு தடுப்பணை கட்டுவதை தடுக்க வேண்டுமம் என்று மனுவில் தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. கேரள அரசு, தமிழக அரசுடன் சுமூகமான போக்கை கடைபிடிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
TamilNadu Government has filed a petition in Supreme court against the Kerala govt's Pambaru dam plan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X