முல்லைப் பெரியாறு அணையில் காவல்நிலையம்: கேரளாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கேரளா காவல்நிலையம் அமைத்துள்ளதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

முல்லைப்பெரியாறு அணைக்கு மத்தியத் தொழில்படை பாதுகாப்புக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது. ஆனால் தமிழகத்தின் கடும் எதிர்ப்பையும் மீறி முல்லைப்பெரியாறு அணைப் பகுதியில் 143 போலீசாருடன் புதிய காவல் நிலையத்தை கேரளா அமைத்துள்ளது.

TN moves SC against Kerala' police station in MullaiPeriyar

கேரளாவின் இந்த முடிவுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் காவல்நிலையம் அமைத்த கேரள அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.

அம்மனுவில் முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளபோது, காவல்நிலையம் அமைத்த கேரள அரசின் முடிவு தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் முன்னிலையில் வழக்கறிஞர் பாலாஜி ஆஜராகி இம்மனுவைத் தாக்கல் செய்தார். இம்மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+