மோடிக்கு எதிராக திருநங்கை போட்டி! பிரசாரத்துக்கு 10 ஆயிரம் திருநங்கைகள் வாரணாசி வருகை!!
வாரணாசி: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி மற்றும் டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோரை எதிர்த்து திருநங்கை கமலா போட்டியிட உள்ளார்.
லோக்சபா தேர்தலில் குஜராத்தின் வதோதரா மற்றும் உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். வாரணாசியில் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என்று கேஜ்ரிவால் அறிவித்திருக்கிறார்,

இந்நிலையில் கமலா என்ற திருநங்கை சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து கமலா கூறுகையில், டெல்லியில் ஆட்சியை நடத்த முடியாமல் ஓடியவர் அரவிந்த் கேஜ்ரிவால். 2002ஆம் ஆண்டு வன்முறையால் மோடியின் மதிப்பு சீர்குலைந்துபோயுள்ளது. இது எனக்கு பலம் என்கிறார்.
மேலும் வாரணாசி நகரம் சிவபெருமானின் நகரம். அவர் ஆணும் பெண்ணுமாக அர்த்தநாதீஸ்வரராக தோன்றியவர். எங்களையும் புராணங்கள் அர்த்தநாரீஸ்வரர்களாகவே போற்றுகிறது. அதனால் வாக்காளர்கள் எங்களை ஆதரிக்க வேண்டும் என்கிறார்.
கமலாவை ஆதரித்து நாடு முழுவதும் இருந்து 10 ஆயிரத்துக்கும் அதிகமான திருநங்கைகள் ஏப்ரல் 10-ந் தேதியன்று வாரணாசிக்கு வருகை தர இருப்பதாக கமலாவின் தேர்தல் ஒருங்கிணைப்பாளர் விக்ரம் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications