பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்: ராஜ்யசபாவில் திமுக எம்பி திருச்சி சிவா
டெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று ராஜ்யசபாவில் திமுக எம்.பி. திருச்சி சிவா வலியுறுத்தினார்.
ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அவர்கள் கடந்த 24 ஆண்டுகாலமாக சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இது தொடர்பான வழக்கில் கடந்த டிசம்பர் 2-ந் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், குற்றவியல் சட்டம் 435-ன் கீழ் 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசின் ஒப்புதல் அவசியம்; அதே நேரத்தில் அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் மாநில அரசுக்குள்ள உரிமைகளின் அடிப்படையில் 7 பேரையும் விடுதலை செய்வதை யாரும் தடுக்க முடியாது என தெரிவித்தது.
இந்நிலையில் "7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது; இது குறித்து கருத்து தெரிவிக்க" கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. இக்கடிதத்தை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியிருந்தார்.
இதனிடையே ராஜ்யசபாவில் இன்று பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் 24 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்து வருகின்றனர்; அவர்களை விடுதலை செய்ய வேண்டும்; இது தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய கடிதத்துக்கு மத்திய அரசு விரைவாக பதிலளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
நுழைவுத்தேர்வுக்கு எதிர்ப்பு
மேலும் ராஜ்யசபாவில் பேசிய அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன், மருத்துவ படிப்புகளுக்கு தமிழக கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது என கோரிக்கை விடுத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications