நான் தவறு இழைத்துவிட்டேன்.. ராஜினாமா கடிதம் மீது தீதி நடவடிக்கை எடுக்கக் கூடாது.. ஜிதேந்திர திவாரி
கொல்கத்தா: நான் தவறு இழைத்துவிட்டேன், நான் கொடுத்த ராஜினாமா கடிதம் மீது மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுக்கக் கூடாது என கேட்டுக் கொள்வதாக திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ ஜிதேந்திர திவாரி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் இன்று நடைபெறும் பாஜக பேரணி மற்றும் பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார். இந்த நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து அமைச்சர் சுவேந்து அதிகாரி, பாரக்பூர் தொகுதி திரிணமூல் எம்எல்ஏ ஷில்பத்ரா தத்தா, பந்தபேஷ்வர் தொகுதி எம்எல்ஏ ஜிதேந்திர திவாரி ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.

சிபிஎம் பெண் எம்எல்ஏ தப்சி மண்டல் ராஜினாமா செய்துள்ளார். இந்த நிலையில் 24 மணி நேரத்தில் தனது முடிவை திவாரி மாற்றிக் கொண்டார். இதையடுத்து அவர் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் அரூப் பிஸ்வாஸையும் தேர்தல் வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோரையும் சந்தித்தார்.
அப்போது திவாரி கூறுகையில் ராஜினாமா செய்தது எனது தவறு. சில தவறான புரிதல்கள் இருந்தன. இது முற்றிலும் எனது தவறே. எனது செய்கையால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காயமடைந்ததாக எனக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தீதியை புண்படுத்தும் எதையும் என்னால் செய்ய முடியாது.
நான் தனிப்பட்ட முறையில் மம்தா தீதியை சந்தித்து மன்னிப்பு கோருவேன். திரிணமூல் காங்கிரஸில் தொடர்ந்து பணியாற்றுவேன். எனது ராஜினாமா கடிதம் மீது தீதி நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றார் திவாரி.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் திவாரியின் ராஜினாமா கடிதம் இருக்கிறது. திரிணமூல் காங்கிரஸில்தான் திவாரி அன்று இருந்தார், இன்று இருக்கிறார், நாளையும் அவர் இங்குதான் இருப்பார். அனைத்து குடும்பங்களிலும் பிரச்சினை இருக்கத்தான் செய்யும். ஆனால் அது சரி செய்யப்படும் என்றார்.
-
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்?












Click it and Unblock the Notifications