இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர்
அகர்தாலா: அரசு அலுவலகங்கள் இனி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே செயல்படும். வாரம் 2 நாள் விடுமுறை விடப்படும். இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மற்ற 5 நாட்களில் வேலை நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா அறிவித்துள்ளார்.
நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக திரிபுரா உள்ளது. இங்கு பாஜகவின் ஆட்சி நடக்கிறது. முதல்வர் மாணிக் சகா செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், தான் ஐடி நிறுவனங்கள் போல் தங்களுக்கும் வாரத்தில் 2 நாட்கள் வரை விடுமுறை கொடுக்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை வழங்கினால் தங்களால் Work-life balance-யை சரியாக கையாள முடியும் என்று கூறி வந்தனர்.
இந்நிலையில் தான் அரசு ஊழியர்களின் கோரிக்கையை முதல்வர் மாணிக் சாஹா நிறைவேற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களிலும் இனி அனைத்து சனிக்கிழமைகளும் விடுமுறை வழங்கப்பட உள்ளது. இதற்கு முன்பு மாதத்தில் வாரத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்பட்டன. இனி அந்த 2 நாட்களும் அரசு அலுவலகங்கள் செயல்படாது. இதன்மூலம் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும் விடுமுறை தினம் என தெரிவிக்கப்ட்டுள்ளது.
மேலும் இதற்கு முன்பு தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அரசு அலுவலகத்தில் பணி நேரம் இருந்தது. தற்போது முன்கூட்டியே அலுவலகம் தொடங்கும். அதன்படி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அரசு அலுவலகங்கள் செயல்பட உள்ளது. இதன் மூலம் வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை வழங்கினாலும் மக்களுக்கான அரசு பணிகள் மற்றும் நிர்வாகத் திறன் பாதிக்கப்படாமல், ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிட முடியும் என்று அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
திரிபுரா அரசின் இந்த முடிவுக்கு அரசு ஊழியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி தலைமைச் செயலகத்தின் மூத்த அதிகாரி துலால் தேப் கூறுகையில், "இது ஒரு முற்போக்கான நடவடிக்கை. மத்திய அரசு மற்றும் பிற மாநில ஊழியர்களுக்கு இணையாக திரிபுரா ஊழியர்களும் சிறப்பாகச் செயல்பட இது உதவும். இந்த புதிய நடைமுறையின் தொடக்கத்தில் நீண்ட தூரம் பயணம் செய்யும் ஊழியர்களுக்குச் சற்று சிரமமாக இருந்தாலும், விரைவில் அனைவரும் இந்த புதிய நேரத்திற்கு பழகிவிடுவார்கள்'' என்றார்
வனத்துறையைச் சேர்ந்த டாக்டர் குயின் சர்மா கூறுகையில், "மாதத்திற்கு நான்கு சனிக்கிழமைகள் விடுமுறை கிடைப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இது எங்களின் பணித் திறனை (Productivity) அதிகரிக்க உதவும். இந்தச் சிறந்த முயற்சிக்கு அரசுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்'' என்றார்.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications