திரிபுரா: உள்ளாட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற பாஜக.. திரிணாமுல் வென்ற இடங்கள் எத்தனை தெரியுமா?
அகர்தலா: திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் காலை முதல் எண்ணப்பட்டது. மொத்தமுள்ள 334 இடங்களில் ஆளும் பாஜக 329 இடங்களைக் கைப்பற்றியது. திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சிபிஎம் தலா ஒரு இடங்களைக் கைப்பற்றின.
திரிபுராவில் அகர்தலா மாநகராட்சியின் 51 வார்டுகள், 13 நகராட்சிகள், 6 நகர் பஞ்சாயத்துகள் என மொத்தம் 334 நகர்ப்புற உள்ளாட்சி வார்டுகளுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 112 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளனர்.

222 வார்டுகளுக்கான தேர்தல்
இதர 222 இடங்களுக்கான வாக்குப் பதிவு அண்மையில் நடைபெற்றது. இந்த 222 இடங்களில் மொத்தம் 785 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஏற்கனவே 36 வேட்பாளர்கள் வேட்புமனுக்களைத் திரும்பப் பெற்றனர்.

திரிபுராவில் மும்முனைப் போட்டி
திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பாஜக- திரிணாமுல் காங்கிரஸ்- சிபிஎம் என மும்முனைப் போட்டி இருந்தது. இத்தேர்தலின் போது மிகப் பெரிய வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டதாக பாஜக மீது திரிணாமுல் காங்கிரஸ், சிபிஎம் கட்சிகள் புகார் தெரிவித்தன. மேலும் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரம் செய்த திரிணாமுல் காங்கிரஸ் இளைஞரணித் தலைவர் சாயோனி கோஷ் கைது செய்யப்பட்டார்.

உச்சநீதிமன்றத்தில் புகார்
அப்போது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களை பாஜகவினர் போலீசார் துணையுடன் கொடூரமாக தாக்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டன. ஆனால் திரிபுரா உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க உச்சநீதிமன்றம் ஏற்கனவே மறுத்திருந்தது.

வாக்கு எண்ணிக்கை- பாஜக முன்னிலை
இதனைத் தொடர்ந்து கடந்த வியாழக்கிழமையன்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப் பதிவின் போதும் முறைகேடுகள் நடைபெற்றதாக திரிணாமுல் காங்கிரஸ், சிபிஎம் கட்சிகள் குற்றம்சாட்டி இருந்தன. இந்த நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் 13 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் அகர்தலா மாநகராட்சி மற்றும் பல நகராட்சி, நகர் பஞ்சாயத்து வார்டுகளை ஆளும் பாஜகவே கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 334 இடங்களில் ஆளும் பாஜக 329 இடங்களைக் கைப்பற்றியது. திரிணாமுல் காங்கிரஸ், சிபிஎம், திப்ரா மோதா தலா ஒரு இடங்களைக் கைப்பற்றின. அகர்தலா மாநகராட்சியில் மொத்தம் உள்ள 51 வார்டுகளிலும் பாஜக மொத்தமாக வென்றுள்ளது. மேலும். திரிபுராவில் உள்ள 13 நகராட்சிகளையும் பாஜகவே கைப்பற்றியது.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications