வீட்டு சாப்பாடு இல்லாவிட்டால் என்ன, ஸ்விக்கி இருக்குதா? கோர்ட்டில் கேட்ட கார்த்தி சிதம்பரம்
Recommended Video
டெல்லி: ஸ்விக்கி அல்லது ஜோமாடோ மூலம் உணவு ஆர்டர் செய்து தரும்படி கார்த்தி சிதம்பரம் சிபிஐயிடம் கோரிக்கைவிடுத்தார்.
ஐஎன்எக்ஸ் வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கார்த்தி சிதம்பரத்திற்கு 5 நாள் காவல் நீடிப்பு செய்து நீதிபதி சுனில் ராணா உத்தரவிட்டார்.
அதேநேரம், தனக்கு வீட்டு சாப்பாடு வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் தரப்பு விடுத்த கோரிக்கையை நீதிபதி ஏற்கவில்லை. மருந்துகளை மட்டும் எடுத்துச் செல்ல அனுமதி அளித்தார்.
அப்போது, வீட்டு சாப்பாடு கிடைக்காது என்றால், சிபிஐ விசாரணை அதிகாரி, ஸ்விக்கி அல்லது ஜோமாடோ மூலம் உணவு ஆர்டர் செய்வார் என நம்புகிறேன் என கார்த்தி வேடிக்கையாக தெரிவித்தார். இதற்கு சிபிஐ தரப்பு இல்லை என பதில் அளித்தது.
அப்படியும் விடாத, கார்த்தி சிதம்பரம், அப்படியானால், ஸ்ஸவிக்கி அல்லது ஜோமோடாவை நீங்கள் ரெடி செய்தாக வேண்டும் என்றார்.
இதனிடையே கார்த்தி சிதம்பரம் தரப்பில் ஆஜரான சீனியர் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, 2008ல் விர் சங்க்வி என்ற முன்னணி பத்திரிகையாளர்தான், ஐஎன்எக்ஸ்ஸ மீடியா முறைகேடு தொடர்பாக தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சருக்கு புகார் அளித்தார். அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விசாரணையை ஆரம்பிக்க முயற்சி எடுத்தார், என்று வாதிட்டார்.