Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை! அதிகாலையிலேயே அதிரடி சம்பவம் செய்தது ராணுவம்!

Subscribe to Oneindia Tamil

ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தின் குரேஸ் செக்டாரில் உள்ள நௌஷெரா நார்ட் பகுதியில் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள் 2 பேரை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது.

குரேஸ் செக்டாரில் இந்திய இராணுவம் மற்றும் ஜம்முகா ஷ்மீர் போலீஸ் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

Jammu kashmir terrorist indian army

குரேஸ் செக்டாரில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைக் கண்டறிந்து, எச்சரிக்கைப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதன் விளைவாக பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலடியாக, நமது ராணுவப் படையினர் திறம்பட துப்பாக்கிச் சூடு நடத்தி, இரண்டு பயங்கரவாதிகளை வீழ்த்தினர் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

குரேஸ் பகுதியில் ஊடுருவல் முயற்சி இருக்கலாம் என்று ஜம்மு- காஷ்மீர் காவல்துறையினரால் வழங்கப்பட்ட உளவுத்துறை தகவலை அடுத்து இந்த நடவடிக்கை தொடங்கப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், ஆபரேஷன் அகல் என்ற தனி பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில், மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் அந்த நடவடிக்கையில் கொல்லப்பட்டதீவிரவாதிகளின் மொத்த எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+