50 வயதுக்குட்பட்ட பெண்களில் முதல்முறையாக சுவாமி தரிசனம் செய்து சாதனை.. 2-ஆவது முயற்சியில் வெற்றி!
Recommended Video

சபரிமலை: 50 வயதுக்குட்பட்ட பெண்கள் முதல்முறையாக சுவாமி தரிசனம் செய்து இரு பெண்கள் சாதனை படைத்துள்ளனர்.
சபரிமலையில் 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய காலம் காலமாக அனுமதி அளிக்கப்படுவதில்லை. இந்த நிலையில் உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு அனைத்து வயதுடைய பெண்களையும் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து ஐப்பசி மாதம் நடைத்திறப்பின் போது சுவாமி தரிசனம் செய்ய பெண்கள் குவிந்தனர். எனினும் இந்து அமைப்புகள், பாஜகவினர் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.

144 தடை உத்தரவு
சபரிமலை வரும் பெண்களை உரிய பாதுகாப்போடு போலீஸார் அழைத்து சென்றாலும் அவர்களால் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மேல் முன்னேறி சன்னிதானத்தை அடைய முடியவில்லை. இதனால் போராட்டக்காரர்களை ஒடுக்க 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.

இரு பெண்கள்
இந்த நிலையில் சபரிமலை கோயிலுக்குள் இன்று அதிகாலை இரு பெண்கள் நுழைந்து சுவாமி தரிசன்ம செய்தனர். மலப்புரம் பகுதியைச்சேர்ந்த கனகதுர்காவும் (46) கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பிந்துவும் (40) போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டனர்.

போராட்டக்காரர்கள்
சுமார் 3.45 மணியளவில் அவர்கள் இருவரும் சுவாமி தரிசனம் செய்தனர். அந்த சமயத்தில் போராட்டக்காரர்கள் யாரும் இல்லை என கூறப்படுகிறது. இந்த இரு பெண்களும் கடந்த மாதம் 24-ஆம் தேதி சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர்.

திரும்பி சென்ற பெண்கள்
அப்போது அவர்கள் இருவரும் சபரிமலை கோயிலுக்கு 2 கி.மீ. தூரத்தில் உள்ள அப்பாச்சிமேடு பகுதியில் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இவர்களுடன் போலீஸார் சென்றும் போராட்டக்காரர்கள் அவர்களை விடவில்லை. மாறாக கீழே சென்று சுவாமி சரணம் ஐயப்பா சொல்லிவிட்டு கிளம்புமாறு கூறிவிட்டனர். இதையடுத்து இருவரும் திரும்பி சென்றனர்.

பெண்கள் போராட்டம்
இந்த நிலையில் இரண்டாவது முயற்சியாக நேற்று இரவு சபரிமலைக்கு வந்த பிந்துவும் கனகதுர்காவும் சன்னிதானம் வரை சென்று ஐயனை தரிசனம் செய்து சாதனை படைத்துவிட்டனர். சபரிமலைக்குள் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என கூறி கேரளாவில் பெண்களின் சுவர் போராட்டம் 620 கி.மீ வரை கைகளை இணைந்து கொண்டு பெண்கள் மனிதசங்கிலி போல் நின்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications