அஸ்ஸாமில் 6 ஓ.என்.ஜி.சி. ஊழியர்களை துப்பாக்கி முனையில் கடத்திய உல்பா தீவிரவாதிகள்
குவஹாத்தி: அஸ்ஸாமில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் நிறுவனத்தின் ஊழியர்கள் 6 பேரை துப்பாக்கி முனையில் உல்பா தீவிரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஸ்ஸாம் தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்தி வருகிறது உல்பா (ஐ) இயக்கம். சீனாவின் ஆதரவுடன் செயல்படுகிற தீவிரவாத இயக்கங்களில் உல்பாவும் ஒன்று.

அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் நிறுவன பணியாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்களை கடத்தி பணம் பேரம் பேசுவதையும் உல்பா தீவிரவாதிகள் வாடிக்கையாக வைத்துள்ளனர். 2 ஆண்டுகளுக்கு முன்னர் அஸ்ஸாமில் ரூ1 கோடி கேட்டு பாஜக பிரமுகர் மகனை கடத்தி சென்றனர் இந்த தீவிரவாதிகள்.
கடந்த டிசம்பர் மாதம் அருணாச்சல பிரதேசத்தின் சங்லாங் மாவட்டத்தில் தனியார் எண்ணெய் நிறுவன ஊழியர்கள் 2 பேரை உல்பா தீவிரவாத கும்பல் கடத்திச் சென்றது. பல மாதங்கள் பிணைக் கைதிகளாக வைத்திருந்த நிலையில் கடந்த 3-ந் தேதிதான் இருவரையும் விடுவித்தனர்.
இந்த நிலையில் அஸ்ஸாமின் சாராய்டியோ மாவட்டத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவன ஊழியர்கள் 6 பேரை அதிகாலை 1.30 மணிக்கு துப்பாக்கி முனையில் உல்பா தீவிரவாத கும்பல் கடத்திச் சென்றுள்ளது. ஓ.என்.ஜி.சி. ஊழியர்கள் 6 பேரை கடத்திச் சென்ற தீவிரவாதிகள் இதுவரை எந்த நிபந்தனையையும் தெரிவிக்கவில்லை.
இதனிடையே 6 ஊழியர்கள் எங்கே பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர் என்பதை கண்டறிவதில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையையும் மேற்கொண்டு வருகின்றனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications