பலாத்காரங்களில் ஈடுபடுபவர்களை பாரபட்சமின்றி தண்டிக்க வேண்டும்: யுனிசெப்
லக்னௌ: பாலியல் பலாத்கார சம்பவங்களில் ஈடுப்படும் குற்றவாளிகளை எந்த விதமான பாரபட்சமும் இன்றி தண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நீதி கிடைக்கவேண்டும் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் தலித் சிறுமிகள் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணை தாமதப்படுத்தப்பட்டு வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் நிதியம் (யுனிசெப் ), கடும் கண்டனத்தை முன்வைத்துள்ளது.
"பெண்கள் மற்றும் சிறுமிகளை பாலாத்காரம் செய்யும் கொடூர சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவை வார்த்தையால் வர்ணிக்க முடியாத குற்றங்களாக இருக்கின்றன. பல இடங்களில் இது போன்ற குற்றங்கள் வெளிவருவதே இல்லை.
உத்தரப் பிரதேசத்தில் சிறுமிகள் இருவர் கொடூரமாக பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு, பின்னர் அவர்களை உயிருடன் மரத்தில் தொங்கவிட்டு கொலை செய்த சம்பவம், மிகவும் மோசமான போக்கினை காண்பிக்கின்றது. இது போன்ற மிருகத்தனமான பாலியல் வன்முறைகள் கண்டிக்கத்தக்கது.
இந்த வேலைகளில் ஈடுப்படும் குற்றவாளிகளை எந்த விதமான பாரபட்சமும் இன்றி தண்டிக்க வேண்டும்.
இது போன்ற வழக்குகளில், நியாயப்படுத்துவது, குற்றங்களுக்கு காரணம் கூறுவது என எல்லா விதமான கூற்றுகளையும் நியாயப்படுத்துவதை சட்டம் அனுமதிக்க கூடாது. இது போன்ற சம்பவங்கள் சிறுமிகள், இளம் பெண்கள், சமுதாயத்தின் அடிமட்டத்தில் உள்ளவர்கள் என அனைவரையும் பாதிக்கின்றது.
இவை அனைத்தும் மனித இனத்திற்கு எதிரான கொடூரங்களாக பார்க்கப்படுகின்றன. இவை முற்றிலும் மனித உரிமை மீறல்கள்.
உலகில் உள்ள அனைத்து குழந்தைகளையும் நாம் காக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். சிறுவர்களை நாம் பாதுகாப்பும் கண்ணியமிக்கவர்களாக வளர்க்க வேண்டும்" என யுனிசெப் தெரிவித்துள்ளது.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications