மத்திய பட்ஜெட் தாக்கல் முடிந்தது.. நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!
பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது
Recommended Video

டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் முடிவடைந்து இருக்கிறது. மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பட்ஜெட் தாக்கல் செய்தார்.
வழக்கமாக பிப்ரவரி இறுதியில்தான் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் கடந்த வருடத்தில் இருந்து பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல் இந்த வருடத்திற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடந்தது. 2018-2019-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.
இது நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தையை கடைசி முழு பட்ஜெட் ஆகும். இதற்கு பின் அடுத்த வருடம் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.
அதேபோல் சரக்கு, சேவை வரி அமலுக்கு வந்த பிறகு தாக்கல் செய்யப்படும் முதலாவது பட்ஜெட்டும் இதுதான். மேலும் இதனுடன் ரெயில்வே பட்ஜெட்டும் ஒன்றாக தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
இந்த பட்ஜெட்டில் பல முக்கியமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி உச்ச வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
இந்த வருடம் நிறைய மாநிலங்களில் தேர்தல் நடக்க இருப்பதால் அதை மையமாக வைத்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் தற்போது பட்ஜெட் தாக்கல் நடந்து முடிந்து இருக்கிறது. இந்த நிலையில் நாடாளுமன்றம் திங்கள்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications