Budget 2019 :பெட்ரோல், டீசல் மீது கூடுதல் செஸ் வரி விதிப்பு..விலை உயரும் அபாயம்- வீடியோ
டெல்லி:பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே, மோடி அரசின், 2வது ஆட்சி காலத்து முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்தார்.
பாஜக கூட்டணி தொடர்ந்து இரண்டாவது முறையாக பொதுத்தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்து தனது உரையை அவர் ஆரம்பித்தார்.
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களை, உடனுக்குடன் அறிய இந்த லைவ் பக்கத்தில் இணைந்திருங்கள்.
Jul 05, 2019, 1:12 pm IST
பட்ஜெட் உரையை நிறைவு செய்தார், நிர்மலா சீதாராமன், சுமார் 2 மணி நேரம் 5 நிமிடங்கள் பட்ஜெட் உரை வாசித்தார்
Jul 05, 2019, 1:10 pm IST
தங்கம் விலை உயரும் வகையில், பட்ஜெட்டில் வெளியானது அறிவிப்பு. இதுவரை 10 சதவீதமாக உள்ள தங்கத்தின் மீதான சுங்க வரி, இனி 12.5 சதவீதமாக அதிகரிப்பு- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
Jul 05, 2019, 1:08 pm IST
பெட்ரோல், டீசல் மீது செஸ் வரி அதிகரிப்பு. ரோடு, கட்டமைப்பு செஸ் என்ற பெயரில் 1 லிட்டர் பெட்ரோல், டீசலுக்கு தலா 1 ரூபாய் அதிகரிப்பு.. பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி கோஷம்
Jul 05, 2019, 1:07 pm IST
இறக்குமதி செய்யப்படும் புத்தகங்களுக்கு 5 சதவீதம் கலால் வரி அதிகரிக்கப்படும். ராணுவ தளவாட பொருட்களுக்கு கலால் வரி கிடையாது- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
Jul 05, 2019, 1:00 pm IST
டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு இனிமேல் கட்டணம் கிடையாது- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
Jul 05, 2019, 12:57 pm IST
டிஜிட்டல் பணப் புழக்கம் ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது. ரொக்கப் பணத்தின் மூலம் வணிகம் மேற்கொள்வதை குறைப்பதற்காக, ஆண்டுக்கு 1 கோடிக்கும் மேலாக ஒரு வங்கி கணக்கிலிருந்து பணம் எடுத்தால், TDS வரி 2 சதவீதம் விதிக்கப்படும்- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
Jul 05, 2019, 12:54 pm IST
வருமான வரி தாக்கல் செய்யும்போது பான் கார்டு இனி தேவையில்லை, ஆதார் எண்ணை வைத்தே வரி தாக்கல் செய்ய முடியும். வரி செலுத்துவதை எளிமையாக்க இந்த நடைமுறை கொண்டு வருகிறோம்- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
Jul 05, 2019, 12:46 pm IST
எலக்ட்ரிக் வாகன உற்பத்தியை அதிகரிக்க திட்டம். எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான வரியை 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்க ஜிஎஸ்டி கவுன்சிலை அரசு கேட்டுக் கொண்டுள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களுக்காக வாங்கிய கடன் மீதான வட்டியில், 1.5 லட்சம் வரை வருமான வரியில் தள்ளுபடி பெறலாம்- நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு
Jul 05, 2019, 12:44 pm IST
400 கோடி வரை ஆண்டு வருவாய் கொண்ட நிறுவனங்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும். எனவே, 99.3% நிறுவனங்கள் இந்த திட்டம் வரையறைக்குள் கொண்டு வந்துவிடும் - நிர்மலா சீதாராமன்
முன்பு, 250 கோடி வரையிலான வர்த்தகம் இருந்தாலே 25 சதவீத வரி விதிக்கப்பட்டது
Jul 05, 2019, 12:42 pm IST
நேரடி வரி விதிப்பு 78 சதவீதம் அதிகரித்துள்ளது. 5 லட்சத்திற்கு மேலான ஆண்டு வருவாய் உள்ளவர்கள் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். 5 லட்சத்திற்கு கீழே வருவாய் கொண்டவர்களுக்கு வரி இல்லை- நிர்மலா சீதாராமன் பேச்சு
Jul 05, 2019, 12:38 pm IST
பிசிராந்தையாரை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன் பேச்சு. யானை புகுந்த நிலம் என்ற அறிவுரையை பாண்டியன் அறிவுடை நம்பிக்கு வழங்கினார் பிசிராந்தையார். தவறான உச்சரிப்புடன் நிர்மலா சீதாராமன் செய்யுளை வாசித்ததால் சலசலப்பு
Jul 05, 2019, 12:34 pm IST
பார்வையற்றவர்களும் அடையாளம் காணும் வகையில் 1, 2, 5, 10, 20 ரூபாய் நாணயங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விரைவில், பொது பயன்பாட்டுக்கு இவை கொண்டுவரப்படும்- நிர்மலா சீதாராமன்
Jul 05, 2019, 12:32 pm IST
அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்பிற்காக 100 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளோம்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு
Jul 05, 2019, 12:32 pm IST
அரசு துறை வங்கிகளுக்கு மூலதன நிதியாக ரூ.70,000 கோடி வழங்கப்படும். வராக்கடன் குறைந்துள்ள நிலையில், வங்கிகளுக்கு ஊக்கம் அளிக்க நிதி ஒதுக்கீடு- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
Jul 05, 2019, 12:22 pm IST
17 சுற்றுலா தலங்களை உலகத் தரத்திற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளோம். நமது பழங்குடியினர் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் வகையில் இவை அமையும்- நிர்மலா சீதாராமன்
Jul 05, 2019, 12:17 pm IST
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஆதார்
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் இந்திய பாஸ்போர்ட்டுடன் ஆதார் அடையாள அட்டை வழங்கப்படும். அவர்கள் இந்தியா வரும்போது, 180 நாட்கள் காத்திருப்பு தினத்திற்கு முன்பாகவே இது வழங்கப்படும்- நிர்மலா சீதாராமன்
Jul 05, 2019, 12:17 pm IST
பெண்கள் மேம்பாடு
பெண்கள் சுய உதவிக்குழுவிற்கு முக்கியத்துவம் தரப்படும். அதிகபட்சமாக இந்த குழுக்கள் வாயிலாக தலா ரூ.1 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும். ஜன்தன் வங்கி கணக்கு மூலமாக இதைப் பெறலாம்- நிர்மலா சீதாராமன்
Jul 05, 2019, 12:12 pm IST
பிரதான் மந்திரி கிராமீன் டிஜிட்டல் சக்ஸ்ரதா அபியான் திட்டத்தின்கீழ், 'பாரத் நெட்' என்ற பெயரில், நாட்டின் ஒவ்வொரு பஞ்சாயத்திலும், இன்டெர்நெட் இணைப்பை இலக்காகக் கொண்டுள்ளோம்- நிர்மலா சீதாராமன்
Jul 05, 2019, 12:05 pm IST
புதிய தொழில்கள் துவங்குவோருக்காகவே தனி சாட்டிலைட் டிவி சேனல் துவங்கப்படும். இதில் தொழில் துவங்குவது, வரி உள்ளிட்ட பல விஷயங்கள் காண்பிக்கப்படும். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலமாகவே இந்த சேனல் நிகழ்ச்சிகள் தொகுக்கப்படும் - நிர்மலா சீதாராமன்
Jul 05, 2019, 12:01 pm IST
புதிய தேசிய கல்வி கொள்கையை அரசு கொண்டு வர உள்ளது. உலகின் சிறந்த கல்வி முறையாக மாற்ற இந்த திட்டம். பள்ளி மற்றும் உயர் கல்வித்துறையில் கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளோம். தேசிய ஆராய்ச்சி பவுண்டேஷன் மூலமாக, ஆய்வு கல்வி அதிகரிக்கப்படும். அனைத்து துறைகளிலும் உள்ள நிதி, இதற்கு பயன்படுத்தப்படும். உயர் கல்வி நிலையங்கள், புதிய கண்டுபிடிப்புகளின் தாய் வீடாக மாற்றப்படும். 400 கோடி ரூபாய், இதற்காக ஒதுக்கீடு. ஸ்டடி இன் இந்தியா என்ற திட்டம் கொண்டுவரப்பட்டு வெளிநாட்டு மாணவர்களை நமது கல்வி முறையை கற்றுத்தர ஊக்கப்படுத்துவோம்- நிர்மலா சீதாராமன்
Jul 05, 2019, 11:55 am IST
2024 ஆம் ஆண்டிற்குள் ஊரகப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க இலக்கு, இதற்காக, ஹர் கர் ஜல் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது: நிர்மலா சீதாராமன் தகவல்
Jul 05, 2019, 11:47 am IST
பாரம்பரிய தொழில்களை அதிக கிராம மக்கள் மேற்கொண்டு வருவதால், அதை மேம்படுத்த, நாடு முழுக்க, காதி, தேன், மூங்கில் கிளஸ்டர்கள் அமைக்கப்படும். 2019-20ம் ஆண்டில், 100 கிளஸ்டர்கள் நாடு முழுக்க அமைக்கப்படும். 1,25,000 கிலோ மீட்டர் தூர சாலைகள் மேம்படுத்தப்படும். இதற்காக ரூ.80,250 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
Jul 05, 2019, 11:41 am IST
1.95 கோடி வீடுகள் 2022ம் ஆண்டுக்குள் ஏழைகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம், வீடற்றவர்கள் இல்லாத நிலை உருவாக்கப்படும்- நிர்மலா சீதாராமன்
Jul 05, 2019, 11:34 am IST
3 கோடி சில்லரை வணிகர்கள், கடை உரிமையாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் விரிவுபடுத்தப்படும். ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்குள் வர்த்தகம் செய்யும் வணிகர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். ஆதார் மற்றும் வங்கி கணக்கு மட்டுமே இதற்கு போதுமானது. இந்த திட்டத்திற்கு பிரதான் மந்த்ரி கரம் யோகி மான் தன் யோஜனா என பெயரிடப்பட்டுள்ளது.
Jul 05, 2019, 11:18 am IST
பரத்மாலா திட்டம், சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளை உருவாக்க உதவும், சாகர்மாலா துறைமுக இணைப்பை மேம்படுத்தும்- நிர்மலா சீதாராமன்
Jul 05, 2019, 11:15 am IST
இந்தியா இப்போது 6வது பெரிய பொருளாதார நாடு. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இது 11ஆவது இடத்தில் இருந்தது: நிர்மலா சீதாராமன் உரை
Jul 05, 2019, 11:09 am IST
"சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவை வெற்றிபெற முடியும் என்பதை நாங்கள் செய்து காட்டியுள்ளோம்": நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Jul 05, 2019, 11:08 am IST
நாங்கள் முதலில் பதவியேற்றபோது, இந்தியா, 1.8 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இருந்தது. சில வருடங்களில் அதை 2.7 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றினோம். இன்னும் சில வருடங்களில் 5 டிரில்லியன் டாலராக உயர்த்துவோம் என்று நிர்மலா சீதாராமன் பேசினார்
FM Nirmala Sitharaman: The recent election was charged with brimming home and desire for a bright and stable 'New India'. Voter turnout was highest; every section came to stamp their approval for performing Government #UnionBudget2019pic.twitter.com/kjz5nLsnDL
பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மீண்டும் ஒருமுறை பாஜக அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதை குறிப்பிட்டு உரையை ஆரம்பித்தார்
Jul 05, 2019, 11:02 am IST
பட்ஜெட் தாக்கல் செய்ய நாடாளுமன்றம் கூடியது. சில வினாடிகளில் பட்ஜெட் தாக்கல் உரையை துவங்குகிறார் நிர்மலா சீதாராமன்
READ MORE
7:01 AM, 5 Jul
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடு வசதி பெறுபவர்கள் எண்ணிக்கையை அதிகமாக்கப்படலாம்
7:01 AM, 5 Jul
விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
7:01 AM, 5 Jul
வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 7.5 லட்சம் வரை உயர்த்தப்படலாம் என எதிர்பார்ப்பு
8:21 AM, 5 Jul
குடும்ப சொத்துக்களை பெறும்போதும் வரி செலுத்தும் பழைய வரி முறையை, பட்ஜெட்டில் மீண்டும் அறிவிக்க வாய்ப்பு என தகவல். 1985ம் ஆண்டு இந்த வரி ரத்து செய்யப்பட்டது.
8:32 AM, 5 Jul
ராகு காலத்தில் பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன். இன்று காலை 10.30 மணி முதல் 12 வரை ராகு காலம்
8:47 AM, 5 Jul
மே 23 தேர்தல் முடிவுகள் அறிவிப்பின் போது இந்திய பங்குச் சந்தையான சென்செக்ஸ் ஒரே நாளில் சுமார் 1000 புள்ளிகள் அதிகரித்து வர்த்தகமானது. அது போல் இன்று பட்ஜெட் அறிவிப்பின் போது நடக்குமா..? என பங்குச் சந்தை முதலீட்டாளர்களும் வர்த்தகர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
8:51 AM, 5 Jul
நிதி அமைச்சகத்துக்கு நிர்மலா சீதாராமன் வருகை
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக நிதி அமைச்சகத்துக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகை தந்துள்ளார்.
Delh: Finance Minister Nirmala Sitharaman arrives at Ministry of Finance. She will present the #Budget2019 today at 11 am in Lok Sabha. pic.twitter.com/ttrVBWK10O
பட்ஜெட்டையொட்டி, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டார். இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
Delhi: MoS Finance Anurag Thakur offers prayers ahead of #Budget2019. Finance Minister Nirmala Sitharaman to present the Budget at 11 am in Lok Sabha today pic.twitter.com/fFMWQiyoTH
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு கான்பூரில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் படத்தை வைத்து சிறப்பு பூஜைகளை நடத்தினர் பாஜகவினர்.
9:50 AM, 5 Jul
மும்பை பங்கு சந்தை கிடுகிடு உயர்வு
பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 40,000 புள்ளிகளை தாண்டியுள்ளது.
9:52 AM, 5 Jul
ஜனாதிபதியுடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.
Rashtrapati Bhavan: As per tradition, Finance Minister Nirmala Sitharaman calls on President Ramnath Kovind before presenting the Union Budget pic.twitter.com/5vOMn9qj2H
பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் போது சூட்கேஸில் ஆவணங்களை நிதி அமைச்சர் எடுத்து வருவது மரபு. இம்முறை சூட்கேஸுக்கு விடை கொடுத்து சிவப்பு துணியால் மூடப்பட்ட பைல்களுடன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்.
10:35 AM, 5 Jul
நாடாளுமன்றம் வந்தது பட்ஜெட் உரை. பாதுகாப்புடன் நாடாளுமன்ற அவைகளுக்குள் எடுத்துச் செல்லப்படுகிறது
Delhi: Copies of #Budget2019 have been brought to the Parliament. Finance Minister Nirmala Sitharaman will present the Budget in Lok Sabha at 11 AM today. pic.twitter.com/Rmj4UJPteC
பட்ஜெட் தாக்கல் செய்ய நாடாளுமன்றம் கூடியது. சில வினாடிகளில் பட்ஜெட் தாக்கல் உரையை துவங்குகிறார் நிர்மலா சீதாராமன்
11:03 AM, 5 Jul
பட்ஜெட் உரையை ஆரம்பித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மீண்டும் ஒருமுறை பாஜக அரசு தேர்ந்தெடுக்கப்பட்டதை குறிப்பிட்டு உரையை ஆரம்பித்தார்
11:08 AM, 5 Jul
நாங்கள் முதலில் பதவியேற்றபோது, இந்தியா, 1.8 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இருந்தது. சில வருடங்களில் அதை 2.7 டிரில்லியன் பொருளாதாரமாக மாற்றினோம். இன்னும் சில வருடங்களில் 5 டிரில்லியன் டாலராக உயர்த்துவோம் என்று நிர்மலா சீதாராமன் பேசினார்
FM Nirmala Sitharaman: The recent election was charged with brimming home and desire for a bright and stable 'New India'. Voter turnout was highest; every section came to stamp their approval for performing Government #UnionBudget2019pic.twitter.com/kjz5nLsnDL
"சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவை வெற்றிபெற முடியும் என்பதை நாங்கள் செய்து காட்டியுள்ளோம்": நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
11:15 AM, 5 Jul
இந்தியா இப்போது 6வது பெரிய பொருளாதார நாடு. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இது 11ஆவது இடத்தில் இருந்தது: நிர்மலா சீதாராமன் உரை
11:18 AM, 5 Jul
பரத்மாலா திட்டம், சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகளை உருவாக்க உதவும், சாகர்மாலா துறைமுக இணைப்பை மேம்படுத்தும்- நிர்மலா சீதாராமன்
11:34 AM, 5 Jul
3 கோடி சில்லரை வணிகர்கள், கடை உரிமையாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம் விரிவுபடுத்தப்படும். ஆண்டுக்கு ரூ.1.5 கோடிக்குள் வர்த்தகம் செய்யும் வணிகர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். ஆதார் மற்றும் வங்கி கணக்கு மட்டுமே இதற்கு போதுமானது. இந்த திட்டத்திற்கு பிரதான் மந்த்ரி கரம் யோகி மான் தன் யோஜனா என பெயரிடப்பட்டுள்ளது.
11:41 AM, 5 Jul
1.95 கோடி வீடுகள் 2022ம் ஆண்டுக்குள் ஏழைகளுக்கு வழங்கப்படும். இதன் மூலம், வீடற்றவர்கள் இல்லாத நிலை உருவாக்கப்படும்- நிர்மலா சீதாராமன்
11:47 AM, 5 Jul
பாரம்பரிய தொழில்களை அதிக கிராம மக்கள் மேற்கொண்டு வருவதால், அதை மேம்படுத்த, நாடு முழுக்க, காதி, தேன், மூங்கில் கிளஸ்டர்கள் அமைக்கப்படும். 2019-20ம் ஆண்டில், 100 கிளஸ்டர்கள் நாடு முழுக்க அமைக்கப்படும். 1,25,000 கிலோ மீட்டர் தூர சாலைகள் மேம்படுத்தப்படும். இதற்காக ரூ.80,250 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
11:55 AM, 5 Jul
2024 ஆம் ஆண்டிற்குள் ஊரகப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க இலக்கு, இதற்காக, ஹர் கர் ஜல் என்ற திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது: நிர்மலா சீதாராமன் தகவல்
12:01 PM, 5 Jul
புதிய தேசிய கல்வி கொள்கையை அரசு கொண்டு வர உள்ளது. உலகின் சிறந்த கல்வி முறையாக மாற்ற இந்த திட்டம். பள்ளி மற்றும் உயர் கல்வித்துறையில் கல்வி முறையில் மாற்றம் கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். ஆராய்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளோம். தேசிய ஆராய்ச்சி பவுண்டேஷன் மூலமாக, ஆய்வு கல்வி அதிகரிக்கப்படும். அனைத்து துறைகளிலும் உள்ள நிதி, இதற்கு பயன்படுத்தப்படும். உயர் கல்வி நிலையங்கள், புதிய கண்டுபிடிப்புகளின் தாய் வீடாக மாற்றப்படும். 400 கோடி ரூபாய், இதற்காக ஒதுக்கீடு. ஸ்டடி இன் இந்தியா என்ற திட்டம் கொண்டுவரப்பட்டு வெளிநாட்டு மாணவர்களை நமது கல்வி முறையை கற்றுத்தர ஊக்கப்படுத்துவோம்- நிர்மலா சீதாராமன்
12:05 PM, 5 Jul
புதிய தொழில்கள் துவங்குவோருக்காகவே தனி சாட்டிலைட் டிவி சேனல் துவங்கப்படும். இதில் தொழில் துவங்குவது, வரி உள்ளிட்ட பல விஷயங்கள் காண்பிக்கப்படும். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலமாகவே இந்த சேனல் நிகழ்ச்சிகள் தொகுக்கப்படும் - நிர்மலா சீதாராமன்
12:12 PM, 5 Jul
பிரதான் மந்திரி கிராமீன் டிஜிட்டல் சக்ஸ்ரதா அபியான் திட்டத்தின்கீழ், 'பாரத் நெட்' என்ற பெயரில், நாட்டின் ஒவ்வொரு பஞ்சாயத்திலும், இன்டெர்நெட் இணைப்பை இலக்காகக் கொண்டுள்ளோம்- நிர்மலா சீதாராமன்
12:17 PM, 5 Jul
பெண்கள் மேம்பாடு
பெண்கள் சுய உதவிக்குழுவிற்கு முக்கியத்துவம் தரப்படும். அதிகபட்சமாக இந்த குழுக்கள் வாயிலாக தலா ரூ.1 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படும். ஜன்தன் வங்கி கணக்கு மூலமாக இதைப் பெறலாம்- நிர்மலா சீதாராமன்
12:17 PM, 5 Jul
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் ஆதார்
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கும் இந்திய பாஸ்போர்ட்டுடன் ஆதார் அடையாள அட்டை வழங்கப்படும். அவர்கள் இந்தியா வரும்போது, 180 நாட்கள் காத்திருப்பு தினத்திற்கு முன்பாகவே இது வழங்கப்படும்- நிர்மலா சீதாராமன்
12:22 PM, 5 Jul
17 சுற்றுலா தலங்களை உலகத் தரத்திற்கு உயர்த்த திட்டமிட்டுள்ளோம். நமது பழங்குடியினர் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் வகையில் இவை அமையும்- நிர்மலா சீதாராமன்
12:32 PM, 5 Jul
அரசு துறை வங்கிகளுக்கு மூலதன நிதியாக ரூ.70,000 கோடி வழங்கப்படும். வராக்கடன் குறைந்துள்ள நிலையில், வங்கிகளுக்கு ஊக்கம் அளிக்க நிதி ஒதுக்கீடு- நிர்மலா சீதாராமன் அறிவிப்பு