மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 1% உயர்வு.. அமைச்சரவை ஒப்புதல்!
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 1 சதவீதம் உயர்த்தி வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி : மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 1 சதவீதம் உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதே போன்று அகவிலை நிவாரணம் 5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 1 சதவீதம் உயர்த்தி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதே போன்று அகவிலை நிவாரணமும் 4 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அகவிலை உயர்வு மூலம் 48.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55.51 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள்.
ஜூலை, 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வருகிறது. தனியார் நிறுவன ஊழியர்களின் பணிக்கொடை திருத்த மசோதாவிற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.












Click it and Unblock the Notifications