மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டல் கடிதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிடம் இருந்து மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே பாஜக செய்தித் தொடர்பாளர் ஷானாவாஸ் ஹூசேன் கடந்த வாரம் இதே போன்ற கடிதம் ஒன்றினை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிடம் இருந்து பெற்றுள்ள நிலையில் அந்த வரிசையில் முக்தாரும் இணைக்கப்பட்டுள்ளார்.

Union Minister Mukhtar Abbas Naqvi gets ISIS letter

டெல்லி காவல்துறையின் உயர் அதிகாரிகள் இந்த விவகாரமான கடிதம் குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன. நக்வியின் டெல்லி முகவரியான பாந்த்ரா பார்க் இல்லத்திற்கு ஜனவரி 25 ஆம் தேதியன்று இந்த கடிதம் வந்தடைந்துள்ளது. தபாலில் வந்துள்ள இக்கடிதத்தில் முழுக்க, முழுக்க மோசமான வார்த்தைகள் நிறைந்துள்ளதாகவும், ஆங்கிலம் மற்றும் உருது மொழிகளில் நக்வியையும், பாஜகவையும் கேவலமாக வசைபாடியும் எழுதியுள்ளதாக அரசுத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், "இதுபோன்ற வசைகளை நான் ஏற்கனவே சமூக வலைதளங்கள் மூலமாகவே கண்டுள்ளேன். இது பெரிய விஷயமல்ல" என்று ஷானாவாஸ் ஹூசேன் ஏற்கனவே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+