Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரகாஷ்ராஜ் அவார்டே வாங்கி இருக்கக் கூடாது... கொதிக்கும் மத்திய அமைச்சர் சதானந்த கெளடா!

கவுரி லங்கேஷ் படுகொலையில் அமைதியாக இருந்த மோடியை சிறந்த நடிகர் என்று கூறி, அனைத்து விருதுகளையும் அவருக்கே வழங்கப் போவதாக அறிவித்த பிரகாஷ்ராஜுக்கு மத்திய அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்தார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கர்நாடகாவைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் சில நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்டார். அவரது மரணம் குறித்து எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காமல் மவுனம் சாதித்து வந்தார் பிரதமர் மோடி.

இதையடுத்து நடிகர் பிரகாஷ் ராஜ் , பிரதமர் மோடியை சிறந்த நடிகர் என்று கூறி அதற்கான விருதுகளையும் அவருக்கே கொடுத்துவிடலாம் என்று பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மத்திய அமைச்சர் கெளடா " ரகாஷ் ராஷ் எந்த விருதுமே வாங்கி இருக்கக் கூடாது" என்று கூறியுள்ளார்.

சதானந்த கெளடா கர்நாடகத்தின் முன்னாள் முதலமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.

 மோடி குறித்து எழுதிய கவுரி

மோடி குறித்து எழுதிய கவுரி

கர்நாடகாவில் ''லங்கேஷ் பத்திரிக்கா" என்ற பெயரில் பத்திரிக்கை நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார் பிரபல பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ். தனது பத்திரிக்கையில் வலது சாரிகள் குறித்தும், ஆர்.எஸ்.எஸ், பாஜக குறித்தும் அடிக்கடி விமர்சன கட்டுரைகள் எழுதி வந்தார். இவர் மோடி பற்றி எழுதி வந்த கட்டுரைகள் அனைத்தும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

 கவுரி சுட்டுக் கொலை

கவுரி சுட்டுக் கொலை

இதையடுத்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் நாடு சாலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இவரைக் கொன்றவர்கள் யார் என்று கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் இன்னும் திணறி வருகின்றனர். இவரைக் கொன்றவர்களை கண்டுபிடிக்க கூறி பல அமைப்புகளும், எதிர்க்கட்ச்சிகளும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

 மோடி நல்ல நடிகர்

மோடி நல்ல நடிகர்

இந்த நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜ் சில வாரங்களுக்கு முன்பு இந்த விசயம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அதில் அவர் " கவுரி லங்கேஷின் கொலையில் எல்லோரும் கருத்து தெரிவித்திருந்தனர் ஆனால் பிரதமர் மோடி மட்டும் இது வரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அவர் வேண்டும் என்றே மவுனமாக இருக்கிறார். பிரதமருக்கு மிகவும் நன்றாக நடிக்கத் தெரிந்திருக்கிறது. அவர் என்னைவிடவும் நல்ல நடிகர். அவருக்கு சிறந்த நடிருக்கான விருதுகளை கொடுத்து விடலாம் " என்று கூறியிருந்தார்.

 விருதே வாங்கி இருக்க கூடாது

விருதே வாங்கி இருக்க கூடாது

பிரகாஷ் ராஜின் இந்தக் கருத்து மிகவும் பேசப்பட்ட நிலையில் , மத்திய அமைச்சர் கெளடா இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் " பிரகாஷ் நல்ல நடிகர் . அவர் இப்போது திடீர் என்று இடது சாரிகளுக்கு ஆதரவாக பேசி வருகிறார். இது மக்களுக்குப் பிடிக்காது. விருது அவசியம் இல்லை என்று நினைக்கும் நபர், விருது கொடுக்கும் போதே அதை வேண்டாம் என்று கூறியிருக்க வேண்டும். இப்போது பிரதமருக்கு கொடுப்பேன் என்று கூறுவது அநாகரிகம்" என்று கூறினார்.
கொல்லப்பட்ட காவிரி லங்கேஷுக்கு , நடிகர் பிரகாஷ் ராஜ் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரகாஷ் ராஜ்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+