ஒடிஷா ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா? மத்திய அமைச்சர்கள் கருத்தால் குழப்பம்- சர்ச்சை!
புவனேஸ்வர்: ஒடிஷா ரயில் விபத்துக்கு காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். அதேநேரத்தில் கிரிமினல்களின் நாசவேலை காரணமா? என்பது குறித்து விசாரிக்க சிபிஐ விசாரிக்க ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளதாக மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான் கூறியிருப்பது குழப்பத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஒடிஷாவின் பாலசோர் என்ற இடத்தில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், சரக்கு ரயில் மற்றும் பெங்களூர்- ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் ஆகியவை விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளதாக ஒடிஷா மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இவ்விபத்தில் உயிரிழந்த பலரது உடல்கள் அடையாளம் காணப்படாமல் இருக்கின்றன.

ஒடிஷா ரயில் விபத்து நிகழ்ந்த வெள்ளிக்கிழமை பின்னிரவு முதல் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பாலசோரில் முகாமிட்டு மீட்பு மற்றும் மறுசீரமைப்பு பணிகளை பார்வையிட்டு வந்தார். மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும் பாலசோரில் முகாமிட்டிருந்தார்.
பாலசோரில் மீட்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 50 மணிநேரத்துக்குப் பின்னர் ரயில் பாதைகள் சீரமைக்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டன.
இதனிடையே ஒடிஷா ரயில் விபத்துக்கு காரணங்கள் கண்டறியப்படவில்லை என நேற்று காலை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியிருந்தார். ஆனால் சில மணிநேரங்களில் இண்டர் லாக்கிங் பிரச்சனைதான் காரணம் என கண்டறியப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

அதேநேரத்தில் ரயில் விபத்துகளுக்கு நாசவேலை உள்ளிட்டவை காரணமா? என்பது குறித்து சிபிஐ விசாரிக்க ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளது என மேலும் ஒரு தகவலையும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். இதே கருத்தை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும் கூறியிருந்தார். நாசவேலை காரணமா என்பது தொடர்பாக சிபிஐ விசாரிக்கும் என தர்மேந்திர பிரதான் கூறியிருந்தார். மத்திய அமைச்சர்கள் அடுத்தடுத்து நாசவேலை தொடர்பாக கூறியிருப்பது குழப்பத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications