உ.பி. மற்றொரு கோயிலில் 2,500 டன் தங்கம் இருக்கிறதாம்.. 'கனவு' சாது மீண்டும் அதிரடி!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சிதிலமடைந்த கோட்டையில் 1,000 டன் தங்கம் இருப்பதாக கிளம்பிய அதிரடி ஓயவில்லை. இப்போது மற்றொரு கோயிலில் 2,500 டன் தங்க புதையல் இருக்கிறது என்று கனவு சாது சோபன் சர்கார் புதிய அதிரடியைக் கிளப்பிவிட்டிருக்கிறார்.

உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் அருகே மன்னர் ராவ் ராம் பாக்சிங்கின் கோட்டை உள்ளது. 1857ஆம் ஆண்டு ஆங்கிலேயருக்கு எதிராக போராடியதால் மன்னர் தூக்கிலிடப்பட்டார். இதைத் தொடர்ந்து கோட்டை கைவிடப்பட்டது. தற்போது சிதிலமடைந்துள்ளது.

Gold

இந்நிலையில் உள்ளூர் சாதுவான சோபன் சர்கார் என்பவர், தமது கனவில் மன்னர் தோன்றி கோட்டையில் ஆயிரம் டன் தங்கம் இருக்கிறது என்றும் அதை தோண்டி எடுத்து நாட்டின் பொருளாதார நிலைமையை சரி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார். முதலில் இதை யாரும் நம்பவில்லை.

ஆனால் மத்திய அமைச்சர் சரண் தாஸ் மகந்தை சந்தித்த சாது எப்படியோ நம்ப வைத்துவிட்டார். இதனால் நாளை மறுநாள் கோட்டையில் புதையலைத் தோண்டும் பணி நடைபெற இருக்கிறது. இதற்காக தொல்லியல்துறையினர் அங்கு முகாமிட்டுள்ளனர்.

இதனிடையே தோண்டும் புதையல் தங்களுக்கே சொந்தமானது என்று மன்னர் வாரிசுகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் புதையலைத் தோண்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க.. தெற்கு கான்பூரில் ஃபதேபூர் அருகே உள்ள கோயில்களில் 2,500 டன் தங்கப் புதையல் இருப்பதாக தாம் இன்னொரு கனவு கண்டதாக சொல்லி புதிய பரபரப்புக்கு அடித்தளம் போட்டு வைத்திருக்கிறார் கனவு சாது சோபன் சர்கார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+