‘நான் அவனில்லை’ பட பாணியில் 3 பெண்களை ஏமாற்றித் திருமணம்.. உ.பி. தொழிலதிபர் கைது!
சினிமா பாணியில் மூன்று பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லக்னோ: ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தானைச் சேர்ந்தவர் சமீர் என்ற தொழிலதிபர். இவர் தொழில் நிமித்தம் உத்தரப்பிரதேசத்தில் தனது மனைவி அப்ஷாவுடன் வாழ்ந்து வந்தார். சமீபகாலமாக சமீரின் நடவடிக்கைகளில் அப்ஷாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தனது கணவர் வேறொரு பெண்ணுடன் பழகுகிறாரோ என அவர் சந்தேகித்தார்.

அவரது சந்தேகத்தை உறுதி செய்யும் வகையில் அடிக்கடி சமீருடன், நேகா என்ற பெண் செல்போனில் பேசியுள்ளார். கணவருக்குத் தெரியாமல் நேகாவின் போன் நம்பரை அவரது செல்போனில் இருந்து எடுத்தார் அப்ஷா.
பின்னர் நேகாவுடன் அவர் போனில் பேசினார். அப்போது, சமீரின் செல் நம்பரை தனது கணவருடையது என்று கூறிய நேகா, தான் சமீரின் தம்பி மனைவி என்றும், இதுவரை சமீரை நேரில் பார்த்ததில்லை என்றும் கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் கொஞ்சம் குழம்பினாலும், பின்னர் அப்ஷாவுக்கும், நேகாவுக்கும் சமீர் தங்களை ஏமாற்றியது புரிந்தது. ஒரே ஆள், இருவேறு பேரில் தங்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதை அவர்கள் கண்டுபிடித்தனர்.
இதற்கிடையே சமீருக்கு யாஸ்மின் என்ற பெண்ணுடன் தொடர்பு இருப்பதையும் பேஸ்புக் மூலம் அப்ஷா தெரிந்து கொண்டார்.
இது தொடர்பாக சமீரிடம் அவர் கேட்டபோது, அவர் சிரித்துக் கொண்டே, 'ஆம் எனக்கு ஒன்பது மனைவிகள் இருக்கின்றனர். நீ அதில் ஏழாவது மனைவி' எனத் தெரிவித்துள்ளார். அவர் நகைச்சுவையாக கூறுவது போல் சமாளித்துப் பேசியுள்ளார். அதோடு சமீரின் வங்கிக் கணக்கில் இருந்து பலமுறை நேகாவிற்கும், யாஸ்மினுக்கும் பணப்பரிமாற்றம் நடந்ததையும் அப்ஷா கண்டுபிடித்தார்.
அதனைத் தொடர்ந்து நேகாவை நேரில் சந்தித்தார் அப்ஷா. இருவரும் தாங்கள் ஏமாற்றப்பட்டது தொடர்பாக சமீர் மீது போலீசில் புகார் அளித்தனர். அதில், 'சமீர் தங்களை ஏமாற்றி விட்டதாகவும், மேலும் பல பெண்கள் அவரால் ஏமாற்றப் பட்டிருக்கலாம்' என்றும் அவர்கள் சந்தேகம் தெரிவித்திருந்தனர்.
அப்புகாரின் பேரில் சமீரைக் கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், 'நான் ராஜஸ்தானைச் சேர்ந்தவன். வேடிக்கைக்காக என் மனைவியிடம், எனக்கு ஒன்பது மனைவிகள் இருப்பதாகக் கூறினேன். உண்மையில் எனக்கு மூன்று மனைவிகள் தான் உள்ளனர்' எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. தொழிலதிபர் ஒருவர் மூன்று பெண்களை வெவ்வேறு பெயர்களில் ஏமாற்றித் திருமணம் செய்தது உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'நான் அவனில்லை' படம் பாணியில் பெண்களை ஏமாற்றி, சமீர் திருமணம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள்












Click it and Unblock the Notifications