சானிடைசரில் ஆல்கஹால் இருப்பதால் கோவிலை திறக்க முடியாது- உ.பி. மதுராவில் நூதன போர்க்கொடி
மதுரா: சானிடைசரில் ஆல்கஹால் கலந்து இருப்பதால் கோவில்களை திறக்க அனுமதிக்க முடியாது என உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வழிபாட்டு தலங்கள், ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்களை இன்று முதல் திறக்க மத்திய அரசு அனுமதித்தது. இதனடிப்படையில் பல மாநிலங்களில் வழிபாட்டு தலங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா பாதிப்பு உள்ள தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்படவில்லை. அதேநேரத்தில் ஹோட்டல்கள், மால்கள் திறக்கப்பட்டிருக்கின்றன.

முதல்வர் வழிபாடு
உத்தரப்பிரதேசத்திலும் கோவில்கள், மசூதிகள் இன்று திறக்கப்பட்டன. உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் கோவிலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் காலையில் வழிபாடு செய்தார். கோவில்களில் முக கவசம் அணிந்தும் சமூக விலகலை கடைபிடித்தும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

மதுரா கிருஷ்ணர் கோவில்
இந்த நிலையில் உத்தரப்பிரதேசத்தில் புகழ்பெற்ற மதுரா கிருஷ்ணர் கோவில் இன்று திறக்கப்படவில்லை. இதற்கு அவர்கள் கூறி இருக்கும் காரணம் வினோதமானது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் சானிடைசரால் கைகளை கழுவ வேண்டும் என்கிற அரசு வழிகாட்டு நெறிமுறை. ஆனால் சானிடைசர், ஆல்கஹாலில் தயாரிக்கப்படுகிறது.

சானிடைர் ஆல்கஹால்
ஆல்கஹாலை பயன்படுத்திவிட்டு கோவிலுக்குள் நுழைந்தால் புனிதம் கெடும். ஆகையால் நாங்கள் கோவிலை திறக்கவில்லை என்கின்றனர் பிருந்தாவன், மதுரா கோவில் நிர்வாகத்தினர். இத்தனைக்கும் இந்த கோவில்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. போதுமான அளவு போலீசாரும் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.

ஜூன் 15-க்கு பின் திறப்பு
இருப்பினும் மதுராவின் பிற பகுதிகளில் கோவில்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. ஶ்ரீகிருஷ்ண ஜன்மஸ்தான் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மதுரா கிருஷ்ணர் கோவில் வரும் 15-ந் தேதிக்குப் பின்னரே திறக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications