இது போன்ற ஆளுங்க இருக்கின்ற வரைக்கும் இந்தியா முன்னேறாது!
முசாபர்நகர்: உத்தர பிரதேசத்தில் இஸ்லாமிய கிராம கவுன்சில் இளம்பெண்கள், சிறுமிகள் ஜீன்ஸ் அணிய, செல்போன் பயன்படுத்த தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர்நகர் மற்றும் சஹரன்பூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பத்து கிராமங்களைச் சேர்ந்த இளம்பெண்களுக்கு முஸ்லீம் கிராம கவுன்சில் ஒரு உத்தரவிட்டுள்ளது. அதாவது அந்த கிராமங்களைச் சேர்ந்த திருமணமாகாத பெண்கள் ஜீன்ஸ் அணிய, செல்போன் பயன்படுத்த அந்த கவுன்சில் தடை விதித்துள்ளது.

இது குறித்து கவுன்சிலின் தலைவர் முகமது இர்பான் கூறுகையில்,
எங்கள் சமூக பெண்கள் அணியும் உடைகள் உதாரணமாக நெட் போட்டது, அரைகுறை ஆடைகள் இஸ்லாத்திற்கு எதிரானது. நாங்கள் கிராமத்தில் வாழ்பவர்கள். நகரங்களில் வேண்டுமானால் அத்தகைய உடைகள் அனுமதிக்கப்படலாம். அநாகரீகமான ஆடைகளுக்கு எங்கள் கவுன்சில் தடை விதித்துள்ளது என்றார்.
17 நபர்கள் கொண்ட கவுன்சிலின் பேச்சை கேட்காவிட்டால் முதலில் எச்சரிப்பார்கள் அதன் பிறகு ஊரை விட்டு ஒதுக்கி வைத்துவிடுவார்கள்.
திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்தினால் பிரச்சனை ஏற்படும் என்று கவுன்சில் கருதுகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் கிராமத்தினரில் பலரும் கவுன்சிலின் கருத்தை ஏற்றுள்ளனர். அந்த கவுன்சில் வரதட்சணை பெறுவதற்கு தடை விதித்துள்ளதுடன் குழந்தைகளை கட்டாயமாக படிக்க வைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications