For Daily Alerts
Just In
ரிசர்வ் வங்கி புதிய ஆளுநராக உர்ஜித் படேல் நியமனம்
டெல்லி: ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக உர்ஜித் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரிசர்வ் வங்கியின் ஆளுநராக உள்ள ரகுராம் ராஜனின் பதவிக் காலம் செப்டம்பர் 4-ந் தேதி முடிவடைகிறது. அவருக்கு 2-வது முறையாக பதவி நீட்டிப்பு கொடுக்கக் கூடாது என பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி போர்க்கொடி தூக்கியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ரகுராம் ராஜனும் தாம் பதவியில் தொடர விருப்பமில்லை எனக் கூறியிருந்தார். இதனால் ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் என்பது தொடர்பாக பல்வேறு யூகங்கள் கிளம்பின.
இந்த நிலையில் ரிசர்வ் வங்கியின் தற்போதைய துணை ஆளுநரான உர்ஜித் படேல், புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். 52 வயதாகும் உர்ஜித் படேல் அடுத்த 4 ஆண்டுகாலத்துக்கு ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவி வகிப்பார்.
Comments
English summary
Urjit Patel appointed as new RBI governor today.
Story first published: Saturday, August 20, 2016, 18:41 [IST]