சட்டசபை தேர்தல் வரலாற்றிலேயே.. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ் சிங்
நொய்டா: பாஜக வேட்பாளரும் நொய்டா எம்எல்ஏவுமான பங்கஜ் சிங் நொய்டா தொகுதியில் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். இந்திய அரசியல் வரலாற்றில் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் இவர் வெற்றிபெற்றுள்ளார்.
பாஜக சார்பாக உத்தர பிரதேச தேர்தலில் நொய்டா தொகுதியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் பங்கஜ் சிங் இந்த முறை களமிறக்கப்பட்டார். இவருக்கு ஆதரவாக அங்கு தீவிரமாக பிரச்சாரங்கள் செய்யப்பட்டடன.
மூத்த அமைச்சரின் மகன் என்பதால் இவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பலர் அங்கே சென்றனர். இவருக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்ற பாஜக எம்பி மனோஜ் திவாரிக்கு நொய்டா மக்கள் போராட்டம் செய்தது தேர்தல் நேரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

போராட்டம்
பங்கஜ் சிங்கிற்கு ஆதரவாக மனோஜ் திவாரி நொய்டாவில் பிரச்சாரம் செய்ய சென்றார். அப்போது அங்கு இருந்த போது மக்கள் மொத்தமாக கூடி பங்கஜ் சிங் மற்றும் மனோஜ் திவாரிக்கு எதிராக குரல் கொடுத்தனர். பாஜகவிற்கு எதிராக கடுமையான கோஷங்களை எழுப்பினர். பாஜக உள்ளே வர கூடாது. வெளியே செல்லுங்கள்.. இங்கே பிரச்சாரம் செய்ய கூடாது.. உங்களை அனுமதிக்க மாட்டோம் என்று அப்போது மக்கள் போர்க்கொடி தூக்கினார்கள்.

பெண்கள் போராட்டம்
மனோஜ் திவாரியை உள்ளே விடாமல் அங்கே பெண்கள் சூழ்ந்து நின்றனர். அதோடு எம்பி மனோஜ் திவாரிக்கு எதிராக அங்கு இருந்த மக்கள் செருப்பை தூக்கி காட்டியதும் சர்ச்சையாகி உள்ளது. நொய்டாவில் உள்ள செக்டர் 17 என்ற தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தேர்தல் நேரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு பங்கஜ் சிங் இதனால் தோல்வி அடைவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

அதிக வாக்கு வித்தியாசம்
ஆனால் இப்போது அதே தொகுதியில் பாஜக வேட்பாளரும் நொய்டா எம்எல்ஏவுமான பங்கஜ் சிங் மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். 1.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வென்றுள்ளார். இந்திய அரசியல் வரலாற்றில் சட்டசபை தேர்தலில் ஒருவர் இவ்வளவு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெல்வது இதுவே முதல்முறை. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சற்று நேரத்தில் வெளியாகும்.

எத்தனை வாக்குகள்
இங்கு பங்கஜ் சிங் மொத்தம் 70.84 சதவிகித வாக்குகளை பெற்றார். சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் 16.42 சதவிகித வாக்குகளை பெற்றார். காங்கிரஸ் கட்சி 4.36 சதவிகித வாக்குகளை பெற்றது. இதற்கு முன் சட்டசபை தேர்தலில் மகாராஷ்டிராவில் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரசை சேர்ந்தவருமான அஜித் பவார் பாராமதி தொகுதியில் 1.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அதுவே அதிக வாக்கு வித்தியாச வெற்றியாக இருந்தது.

முறியடிப்பு
அதை தற்போது பங்கஜ் சிங் முறியடித்துளார். இந்த தேர்தலில் 238867 வாக்குகளை பங்கஜ் சிங் பெற்றார். இவரை எதிர்த்து இரண்டாம் இடம் வந்த சமாஜ்வாதி வேட்பாளர் சுனில் சவுத்திரி வெறும் 61130 வாக்குகள் மட்டுமே பெற்றார். இதன் மூலம் 177737 வாக்குகள் வித்தியாசத்தில் பங்கஜ் சிங் வென்று சாதனை படைத்துள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications