வாஸ்கோட காமா எக்ஸ்பிரஸ் ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்டு கோர விபத்து.. 3 பயணிகள் பலி, பலர் காயம்
Subscribe to Oneindia Tamil
பாட்னா: வாஸ்கோட காமா எக்ஸ்பிரஸ் ரயிலின் 13 பெட்டிகள் தடம் புரண்ட விபத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர், 9 பேர் காயமடைந்துள்ளனர்.
உத்தர பிரதேசத்தின் மாணிக்பூர், பான்டா ரயில் நிலையங்கள் அருகே இன்று அதிகாலை 4.18 மணியளவில் இந்த பெரும் விபத்து சம்பவித்துள்ளது. கோவாவில் இருந்து பீகார் தலைநகர் பாட்னா சென்று கொண்டிருந்த இந்த ரயில் பயணிகள் அசந்து தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் திடீரென தடம் புரண்டது.

இந்த விபத்தில் முதலில் 8 பேர் பலியானதாக தகவல் வெளியான நிலையில், பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. 9 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக மருத்துவ உபகரணங்களுடன், மருத்துவ ரயில் ஒன்று காலை 5.20 மணியளவில் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது. ரயில்வே உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications