தமிழகத்துக்கு காவிரி நீர் தர எதிர்ப்பு- செப்.15-ல் தொடர் ரயில் மறியல் போராட்டம்: வாட்டாள் நாகராஜ்
பெங்களூரு: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிட எதிர்ப்பு தெரிவித்து வரும் 15-ந் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று கன்னட சலுவாளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார்.
காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்புப் படி தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை திறந்துவிடாமல் இருந்து வருகிறது கர்நாடகா. இதனால் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு 15,000 கன அடி நீரைத் திறந்துவிட உத்தரவிட்டுள்ளது. இதனடிப்படையில் காவிரியில் கர்நாடகாவும் நீரை திறந்துவிட்டது.

பந்த்
ஆனால் தமிழகத்துக்கு நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் போராட்டம் வெடித்தது. நேற்று கர்நாடகா தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் கர்நாடகாவின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

மனித சங்கிலி
இன்றும் 6-வது நாளாக மாண்டியா பகுதியில் போராட்டம் நடைபெற்றது. மாண்டியாவில் பெண்கள், விவசாயிகள் இணைந்து மனித சங்கிலிப் போராட்டத்தை நடத்தினர். இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ரயில் மறியல்
இதனிடையே வரும் 15-ந் தேதியன்று ரயில் மறியல் போராட்டத்தை நடத்துவோம் என வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார். அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழர்கள் பீதி
கர்நாடகாவில் தொடரும் தமிழகத்துக்கு எதிரான போராட்டங்களால் தமிழர்கள் பெரும் பீதியில் உறைந்துபோயுள்ளனர். ஏற்கனவே தமிழர்களை தாக்குவோம் என சில கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் வாட்டாள் நாகராஜ் மீண்டும் போராட்டத்தை அறிவித்திருப்பது தமிழர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications