விமானத்தில் ஆசிரியையின் காலைத் தொட்டு சில்மிஷம்... தெலுங்கு தேசம் கவுன்சிலர் மீது வழக்கு
ஹைதராபாத்: விமானத்தில் ஆசிரியை ஒருவருக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக தெலுங்கு தேசம் கட்சி கவுன்சிலர் வெங்கடேஸ்வர ராவ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டெல்லியை சேர்ந்த ஆசிரியை ஒருவர் வெள்ளிக்கிழமை புனேவில் இருந்து ஹைதராபாத்திற்கு விமானத்தில் பயணம் செய்தார். அவர் அருகே தெலுங்கு தேசம் கட்சி கவுன்சிலர் வெங்கடேஸ்வர ராவ் அமர்ந்திருந்தார்.

அவர் காலால் தனது காலை தொட்டதாகவும், செக்ஸ் தொல்லை அளித்ததாகவும் அந்த பெண் விமான சிப்பந்திகளிடம் புகார் தெரிவித்தார். மேலும் விமானம் ஹைதராபாத்தில் தரையிறங்கியதும் போலீசில் ராவ் மீது புகார் அளித்தார்.
அதற்குள் ராவ் வேறு விமானம் மூலம் விஜயவாடாவுக்கு சென்றுவிட்டார். உடனே போலீசார் இது குறித்து விஜயவாடா விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ராவ் விஜயவாடா விமான நிலையத்தை அடைந்ததும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அவர் கூறுகையில்,
விமானத்தில் தூங்கும்போது தெரியாமல் என் கால் பட்டிருக்கும். எனக்கு தெலுங்கு மட்டும் தான் தெரியும். வேறு மொழி பேசத் தெரியாது. அதனால் அந்த பெண்ணிடம் எடுத்துக்கூற முடியவில்லை என்றார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் ராவ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக ராவ் புனே செல்லும்போது ரயிலில் சில பெண் பயணிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் புகார் உள்ளது. அந்த புகாரையும் ராவ் மறுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications