விமானத்தில் ஆசிரியையின் காலைத் தொட்டு சில்மிஷம்... தெலுங்கு தேசம் கவுன்சிலர் மீது வழக்கு
ஹைதராபாத்: விமானத்தில் ஆசிரியை ஒருவருக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக தெலுங்கு தேசம் கட்சி கவுன்சிலர் வெங்கடேஸ்வர ராவ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
டெல்லியை சேர்ந்த ஆசிரியை ஒருவர் வெள்ளிக்கிழமை புனேவில் இருந்து ஹைதராபாத்திற்கு விமானத்தில் பயணம் செய்தார். அவர் அருகே தெலுங்கு தேசம் கட்சி கவுன்சிலர் வெங்கடேஸ்வர ராவ் அமர்ந்திருந்தார்.

அவர் காலால் தனது காலை தொட்டதாகவும், செக்ஸ் தொல்லை அளித்ததாகவும் அந்த பெண் விமான சிப்பந்திகளிடம் புகார் தெரிவித்தார். மேலும் விமானம் ஹைதராபாத்தில் தரையிறங்கியதும் போலீசில் ராவ் மீது புகார் அளித்தார்.
அதற்குள் ராவ் வேறு விமானம் மூலம் விஜயவாடாவுக்கு சென்றுவிட்டார். உடனே போலீசார் இது குறித்து விஜயவாடா விமான நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ராவ் விஜயவாடா விமான நிலையத்தை அடைந்ததும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது அவர் கூறுகையில்,
விமானத்தில் தூங்கும்போது தெரியாமல் என் கால் பட்டிருக்கும். எனக்கு தெலுங்கு மட்டும் தான் தெரியும். வேறு மொழி பேசத் தெரியாது. அதனால் அந்த பெண்ணிடம் எடுத்துக்கூற முடியவில்லை என்றார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் ராவ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக ராவ் புனே செல்லும்போது ரயிலில் சில பெண் பயணிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் புகார் உள்ளது. அந்த புகாரையும் ராவ் மறுத்துள்ளார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications