தொடர் மின்வெட்டு.... எம்.எல்.ஏ., கவுன்சிலரை கட்டி வைத்து பொதுமக்கள் போராட்டம்- உ.பி.யில் பரபரப்பு
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் தொடர் மின் வெட்டால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ. மற்றும் கவுன்சிலரையும் சிறைபிடித்து கயிற்றில் கட்டி வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் சந்தவ்லி மாவாட்டத்தில் உள்ள முகல் சராய் பகுதி மக்கள் தொடர் மின்வெட்டாலும், போதிய குடிநீர் வசதி இல்லாததாலும் அவதிப்பட்டனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் பலன் இல்லை.

இதனால் அப்பகுதிக்கு வந்த பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த அத்தொகுதியின் எம்.எல்.ஏ பப்பான் சிங் செளவுகான் மற்றும் அவருடன் வந்த கவுன்சிலர் கயாமுதின் ஆகியோரை கிராம மக்கள் சிறைபிடித்தனர். பலமணி நேரம் அவர்களை கயிற்றில் கட்டிவைத்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இத்தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், எம்.எல்.ஏ மற்றும் கவுன்சிலரை விடுதலை செய்வது தொடர்பாக கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அந்த கிராமத்துக்கு தேவையான அனைத்து பணிகளையும் முடித்து தருவதாக கொடுக்கப்பட்ட வாக்குறுதியைத் தொடர்ந்து இருவரையும் பொதுமக்கள் விடுவித்தனர்.












Click it and Unblock the Notifications