ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்.. அடுத்த வாரமே கோஹ்லிக்கு திருமணம்.. இத்தாலியில் அனுஷ்காவுடன் டும்டும்!
Recommended Video
டெல்லி: கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தனது காதலியும், நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவை இன்னும் சில நாட்களில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் பரவியுள்ளது.
நீண்ட கால காதலர்களான இருவரும், இத்தாலி நாட்டில் வைத்து் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா வென்றுள்ள நிலையில், டி20 தொடரில் கேப்டன் கோஹ்லிக்கு லீவு தரப்பட்டிருந்தது. ஓய்வுக்காகவே இவ்வாறு அவர் விலகியுள்ளார் என கூறப்பட்ட நிலையில்தான், கோஹ்லி திருமணத்திற்காக பிரேக் எடுத்துள்ளதாக தற்போது அதிரடி தகவல் வெளியாகியுள்ளது.
பிரமாண்ட ஏற்பாடுகள்
அனுஷ்கா ஷர்மாவுடன், கோஹ்லி நாளையே இத்தாலி கிளம்ப உள்ளதாகவும், அங்கு வைத்து பிரமாண்டமாக திருமணம் நடைபெற உள்ளதாகவும் கோஹ்லி நட்பு வட்டாரங்கள் வாயிலாக மீடியாக்களுக்கு சில செய்திகள் கசிந்துள்ளன.
குடும்பம், நண்பர்கள்
இத்தாலி திருமண நிகழ்வில் பங்கேற்க கோஹ்லியின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தாலி நாட்டிலுள்ள மிலன் நகரில் திருமண வைபோகம் நிகழ உள்ளது.
மும்பையில் வரவேற்பு
திருமண நிகழ்வில் கிரிக்கெட் வீரர்கள் யாருமே பங்கேற்கப்போவதில்லையாம். இது முழுக்க உறவினர்களும், நண்பர்களும் பங்கேற்கும் நிகழ்வாக இருக்கப்போகிறது. மும்பையில் டிசம்பர் 21ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத்தாலியில் திருமணம்
டிசம்பர் 9, 10, 11 மற்றும் 12ம் தேதிகளில் கோலாகலமாக திருமண வைபோகம் இத்தாலியில் நடைபெற உள்ளதாக ஆணித்தரமாக கூறுகின்றன அந்த தகவல்கள். இம்மாதம் முழுக்க திருமணம் தொடர்பான விழாக்களில் பிஸியாக இருக்கப்போகும் கோஹ்லி, உத்வேகத்தோடு, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் பங்கேற்க உள்ளாராம்.