பட்ஜெட் 2020: நேரடி வரி வழக்குகள் எண்ணிக்கையை குறைக்க விவாத் சே விஸ்வாஸ் திட்டம்
டெல்லி: நேரடி வரி செலுத்துவது தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் விவாத் சே விஸ்வாஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
நேரடி வரி செலுத்துவது தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க விவாத் சே விஸ்வாஸ் (சர்ச்சை இல்லை; நம்பிக்கை) என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். வரி செலுத்துவோரின் மேல் முறையீட்டு வழக்குகள் எந்த மட்டத்தில் நிலுவையில் இருந்தாலும் அவர்கள் இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெறலாம்.

இத்தி்ட்டத்தின்கீழ், வரி செலுத்துவோர் தாம் செலுத்த வேண்டிய பாக்கி தொகையை 31 மார்ச் 2020க்குள் செலுத்தி விட்டால் வட்டி மற்றும் அபராதத் தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். 31 மார்ச் 2020க்கு பிறகு இத்திட்டத்தின் கீழ் பயனைடைய விரும்புவோர் சற்று கூடுதல் தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.
இத்திட்டம் 2020 ஜூன் 30 வரை நடைமுறைப்படுத்தப்படும் என்பதால், வரி செலுத்துவோர் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளிலிருந்து விடுபடுவார்கள்.
உச்சநீதிமன்றம் உட்பட பல்வேறு மேல் முறையீட்டு அமைப்புகளிலும், நேரடி வரி தொடர்பான 4 லட்சத்து 83 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சப்கா விகாஸ் திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 89 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. அரசால் ஏற்படுத்தப்படும் சீர்திருத்த நடவடிக்கைளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தலையீடுகளை ஒழிக்கவும், வருமானவரி சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படும்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications