பட்ஜெட் 2020: நேரடி வரி வழக்குகள் எண்ணிக்கையை குறைக்க விவாத் சே விஸ்வாஸ் திட்டம்
டெல்லி: நேரடி வரி செலுத்துவது தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் விவாத் சே விஸ்வாஸ் திட்டம் செயல்படுத்தப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
நேரடி வரி செலுத்துவது தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க விவாத் சே விஸ்வாஸ் (சர்ச்சை இல்லை; நம்பிக்கை) என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். வரி செலுத்துவோரின் மேல் முறையீட்டு வழக்குகள் எந்த மட்டத்தில் நிலுவையில் இருந்தாலும் அவர்கள் இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெறலாம்.

இத்தி்ட்டத்தின்கீழ், வரி செலுத்துவோர் தாம் செலுத்த வேண்டிய பாக்கி தொகையை 31 மார்ச் 2020க்குள் செலுத்தி விட்டால் வட்டி மற்றும் அபராதத் தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும். 31 மார்ச் 2020க்கு பிறகு இத்திட்டத்தின் கீழ் பயனைடைய விரும்புவோர் சற்று கூடுதல் தொகையை செலுத்த வேண்டியிருக்கும்.
இத்திட்டம் 2020 ஜூன் 30 வரை நடைமுறைப்படுத்தப்படும் என்பதால், வரி செலுத்துவோர் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளிலிருந்து விடுபடுவார்கள்.
உச்சநீதிமன்றம் உட்பட பல்வேறு மேல் முறையீட்டு அமைப்புகளிலும், நேரடி வரி தொடர்பான 4 லட்சத்து 83 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சப்கா விகாஸ் திட்டத்தின் மூலம் ஒரு லட்சத்து 89 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. அரசால் ஏற்படுத்தப்படும் சீர்திருத்த நடவடிக்கைளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தலையீடுகளை ஒழிக்கவும், வருமானவரி சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படும்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications