‘ரோல் மாடல்’ ஆட்சியாளர்.. ஒடிசா மக்கள் கொண்டாடும் ஆளுமை வி.கே.பாண்டியன்.. அட இவ்வளவு செஞ்சிருக்காரா?
புவனேஸ்வர்: ஒடிசா மாநில அரசின் பல்வேறு செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் 5T திட்டம் மற்றும் நபின் ஒடிஷா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் விகே பாண்டியன். ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த விகே பாண்டியன், விருப்ப ஓய்வு பெற்ற மறுநாளே மிகமுக்கிய பதவியை அவருக்கு வழங்கி உள்ளார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக். ஒடிசா மாநில மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையையும், அன்பையும் பெற்ற விகே பாண்டியனுக்கு இந்தப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது.
ஒடிசா இன்றைக்கு நாட்டின் முன்னணி மாநிலமாக உருவெடுத்துள்ளது. இந்தப் புதிய நூற்றாண்டு ஒடிசா மாநிலத்திற்கு புதிய வாய்ப்புகளை கொண்டு வந்துள்ளது. இந்த நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்களில் மாநிலம் ஒவ்வொரு சமூக மற்றும் பொருளாதாரத் துறையிலும் புதிய உச்சங்களைத் தொட்டுள்ளது. மோசமான விவசாயப் பொருளாதார நிலைமையில் இருந்து தொழில்நுட்பம் மற்றும் புதிய பொருளாதாரத்தின் உந்துதலால் நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக ஒடிசா மாநிலம் வளர்ச்சியைக் கண்டுள்ளது. முதல்வர் நவீன் பட்நாயக்கின் தலைமையில், ஒடிசா மாநிலம் மிகச்சிறப்பான நிலையை எட்டியுள்ளது. ஒடிசாவின் மாற்றம் என்பது, குறிப்பாக கடந்த பதினைந்து ஆண்டுகளில், ஆட்சி அமைப்பில் கொண்டுவரப்பட்ட ஆற்றல்மிக்க மாற்றங்களால் ஏற்பட்டது. இந்த முக்கியமான தருணத்தில், ஒடிசா முதல்வரின் நம்பிக்கைக்குரிய தளபதி வி.கே.பாண்டியன் ஆற்றிய பங்கு விலைமதிப்பற்றது.

எவராலும் மறுக்கமுடியாத தலைமைப் பண்புகளைக் கொண்ட ஒரு ஆளுமை - வி.கே.பாண்டியன், ஒடிசா மாநிலத்தை முன்னேற்றுவதற்கான ஒடிசா அரசின் அனைத்து முயற்சிகளிலும் உடன் இருந்துள்ளார் வி.கே.பாண்டியன். இளம் ஆற்றல் மிக்க ஐஏஎஸ் அதிகாரியாக 2000ஆம் ஆண்டில் ஒடிசா அரசின் கீல் பணியில் சேர்ந்தார் வி.கே.பாண்டியன். முதல் பணியாக தரம்கர், கலஹண்டியின் சப்-கலெக்டராக சேர்ந்தார். ஆலை நிர்வாகங்களுடன் அவர் எடுத்த கடுமையான முடிவுகள் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையையும், கூட்டுறவு சங்கங்களுக்கு லாபத்தையும் முழுமையாக வழங்குவதை உறுதி செய்தது. அவரது முயற்சிகள் நெல் கொள்முதலை சரியான முறையில் சீரமைத்ததுடன், அரசுக்கு எப்போதும் இல்லாத அளவுக்கு அதிக வருவாய் ஈட்டவும் உதவியது. இந்த முயற்சி அவருக்கு முதலமைச்சரின் பாராட்டுக்களையும் பெற்றுத் தந்தது.
ரூர்கேலாவில் ஏ.டி.எம் ஆக பதவியேற்ற சில காலத்திலேயே, பாண்டியன் செண்ட் மார்க்கெட் வெளியேற்றத்தில் முக்கிய பங்கு வகித்தார், இது மக்களுக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்த நீதியைப் பெற வழிவகுத்தது. பாண்டியன் ஒடிசாவின் மிகப்பெரிய மாவட்டமான மயூர்பஞ்ச் மாவட்டத்திற்கு ஆட்சியராகப் பொறுப்பேற்ற போது நாட்டின் இளம் வயது கலெக்டர்களில் ஒருவராக இருந்தார். அந்த மாவட்டத்தின் தொலைதூர கிராமங்களுக்கு அவரது தினசரி வருகைகள் மாவட்டத்தின் வளர்ச்சி செயல்முறையை விரைவுபடுத்த உதவியது. அங்கு அவர் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளிப்பதற்கான ஒற்றை சாளரச் முறையை அறிமுகப்படுத்தினார், பின்னர் அது தேசிய மாடலாக எடுக்கப்பட்டு நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டது. மயூர்பஞ்ச் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்கான தேசிய விருதையும் பெற்றார் பாண்டியன்.

கிராமங்கள் மற்றும் தொகுதி அளவில் மாற்றுத்திறனாளிகளைக் கண்டறிந்து மறுவாழ்வு அளிக்கும் முறையை அமைத்தார் பாண்டியன். பாண்டியன் ஹெலன் கெல்லர் விருதை அவர் மாற்றுத் திறனாளிகளுக்காக ஆற்றிய பணிக்காக பெற்றார். அவரது சமயோசித அனுபவத்தின் காரணமாக, பாண்டியன் பாதுகாப்புப் படைகள் மற்றும் நிர்வாகிகளின் ஒருங்கிணைந்த படிப்புகளுக்கான LBSNAA-க்கு பல முறை அழைக்கப்பட்டார். மயூர்பஞ்சில் அவர் ஆற்றிய பணி, மக்கள் சார்பான சிறந்த அரசு நிர்வாகம் நக்சலிசத்தின் பரவலை எவ்வாறு குறைக்கும் என்பதற்கு உதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
2007ஆம் ஆண்டு முதல் கஞ்சம் மாவட்ட கலெக்டராக இருந்த பாண்டியனின் பணி மிகவும் சவாலானது. மாநிலத்தின் அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டமான கஞ்சம் மாவட்டத்தை பல்வேறு அம்சங்களுடன் நிர்வகிப்பது ஒரு பெரிய சவாலாக இருந்தது, அதை அவர் கையில் எடுத்து வெற்றிகரமாக நிறைவேற்றினார். கஞ்சம் கலெக்டராக இருந்த அவர், நாட்டின் சிறந்த மாவட்டத்திற்கான மத்திய அரசின் NREGSக்கான தேசிய விருதை இரண்டு முறை பெற்றார். கஞ்சம் மாவட்டத்தில் அவர் தலைமையின் கீழ் NREGS திட்டத்தில் வங்கியில் ஊதியம் வழங்கும் புரட்சிகர முறையை அறிமுகப்படுத்தினார். அதன் வெற்றியைக் கண்டு, இந்த முறை இந்திய அரசால் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டது.

பாண்டியனின் 'அவுட் ஆஃப் பாக்ஸ்' செயல்பாடுகள், அதோடு நின்றுவிடாமல் தொடர்ந்தன. கஞ்சம் NREGA செயல்படுத்தலில் சிறந்த மாவட்டமாக தேசிய விருது பெற்றது. இந்த வகையில் மாநிலத்தில் உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளுக்கு ரூ.100 கோடி செலுத்தப்பட்டு சாதனை படைத்துள்ளது. அவரது வெற்றிகரமான அணுகுமுறையின் விளைவாக முன்னணி மாற்றங்களுக்காக கஞ்சம் இரண்டு முறை குடியரசுத் தலைவர் விருதைப் பெற்றது. அவரது பீப்பிள் ஃப்ரெண்ட்லி அணுகுமுறை NREGA இன் கீழ் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், பிற மாநிலங்களுக்கு தொழிலாளர் இடம்பெயர்வு சம்பவங்களைக் குறைக்கவும் உதவியது. கஞ்சம் கலெக்டராக இருந்தபோது, அவரது பணிகள் மக்களைப் பற்றிய ஆழ்ந்த உணர்திறன் மற்றும் அரசாங்க செயல்பாட்டில் ஊழலை வேரறுக்கும் நோக்கத்தைத் தெளிவாகக் காட்டியது.
அவரது தலைமையின் கீழ், கஞ்சம் மாவட்ட நிர்வாகம் எச்.ஐ.வி பாதித்தவர்களின் வாழ்க்கையில் பெரிய முன்னேற்றங்களை ஏற்படுத்தியது. கஞ்சம் மாவட்ட கலெக்டராக இருந்த பாண்டியன், எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளித்ததற்காக தேசிய விருதையும் பெற்றார். எய்ட்ஸ் ஆதரவற்ற குழந்தைகளுக்கான பொது நிதியுதவியுடன் கூடிய தங்குமிடத்தை அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார், இது குறுகிய காலத்திற்குள் முன்னுரிமை அடிப்படையில் நிறுவப்பட்டது. ஆதரவற்றோருக்கு பாதுகாவலராகவும், மீட்பராகவும் மாறினார் பாண்டியன். ஒவ்வொரு ஆண்டும் கோபால்பூரில் உள்ள ஸ்ரத்தா சஞ்சீவனி குழந்தைகள் பராமரிப்பு இல்லத்திற்குச் சென்று குழந்தைகளைச் சந்தித்து அவர்களுடன் சிறிது நேரம் செலவிடுவதை வழக்கமாகவே வைத்துள்ளார் பாண்டியன். மறுவாழ்வு மையங்கள், பழங்குடியினர் விடுதிகள் மற்றும் பிற அனாதை இல்லங்களில் மாணவர்களுடன் நேரத்தை செலவிடுகிறார் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன் .

2011 ஆம் ஆண்டு வி.கே.பாண்டியனுக்கும் ஒடிசா மாநில அரசுக்கும் ஒரு முக்கியமான இன்னிங்ஸ் தொடங்கியது என்றே கூறலாம். முதல்வர் நவீன் பட்நாயக், ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியனின் உள்ளார்ந்த குணங்களைக் கண்டு, அவரை முதல்வர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து, மாநிலத்தின் வளர்ச்சியில் அதிகப் பங்களிப்பைச் செய்ய வைப்பதற்காக புவனேஸ்வரில் உள்ள தனது குழுவில் ஒருவராக ஆக்கினார். முதல்வர் நவீன் பட்நாயக்கிற்கு தனிச் செயலாளராக நியமிக்கப்பட்டார் விகே பாண்டியன். அதன்பிறகு, முதல்வர் நவீன் பட்ன்நாயக், வி.கே.பாண்டியனிடம் துடிப்பான, தொலைநோக்குப் பார்வைகொண்ட, ஆற்றல் மிக்க, தெளிவான மற்றும் கடின உழைப்பாளியான ஒரு சரியான நிர்வாகியைக் கண்டார்.
முதல்வர் நவீன் பட்நாயக்கின் கனவு முயற்சியான 5T (Team work, technology, transparency, transformation and time limit) மாற்றத்திற்கான பாதையில் ஒடிசா சென்றதால், வி.கே.பாண்டியன் அதன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். நவீன் மற்றும் வி.கே.பாண்டியன் இருவரும் சாமானியர்களை ஆட்சியின் மையப்புள்ளியாக மாற்றும் பணியில் ஈடுபடத் தொடங்கினர். ஒடிசாவின் வளர்ச்சிக் கதை எழுதப்படத் தொடங்கியது.

5T முன்முயற்சிகள் - ஒடிசாவின் மாற்றத்தைத் தூண்டும் திட்டம் வி.கே.பாண்டியனால் வழிநடத்தப்பட்டது. முதல்வர் நவீன் பட்நாயக்கின் லட்சிய அஜெண்டா, 5டி முயற்சிகள் மூலம் மாநிலத்தை மேம்படுத்தும் திட்டம் முழு வீரியத்துடன் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு அதன் முடிவுகளை ஏற்கனவே காட்டத் தொடங்கியுள்ளது. 2018 இல் தொடங்கப்பட்ட, 5T முன்முயற்சிகள் மாநிலத்தை நிர்வகிக்கும் முறையை மாற்றி வருகின்றன. சாமானியரே ஆட்சி மற்றும் நிர்வாகத்தின் மையப்புள்ளியாக ஆகிவிட்டார்.
முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் மாநிலத்தின் மாற்றத்தை வி.கே.பாண்டியன் கவனித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் ஒடிசா கண்ட ஆட்சியில் சில முக்கியமான முன்னேற்றங்கள் மோ சர்க்கார், வரலாற்று மற்றும் மத இடங்களின் சிறப்பான மாற்றம், பூரியில் பாரம்பரிய வழித்தட திட்டம், 5T உயர்நிலை பள்ளி திட்டம், ஒடிசாவை இந்தியாவின் விளையாட்டு மையமாக மாற்றுதல், மாநிலம் முழுவதும் சுகாதார வசதிகள், அனைத்து மாவட்டங்களிலும் நீர்ப்பாசன வசதிகள் மறுமலர்ச்சி, மிஷன் சக்தி மூலம் பெண்களுக்கு அதிகாரமளித்தல், ஒடிசாவை இந்தியாவின் எஃகு உற்பத்தி மையமாக மாற்றுதல் போன்றவைக்கு வி.கே.பாண்டியனின் உழைப்பு மிகப்பெரியது.

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சவாலான கோவிட்-19 தொற்றுநோயை ஒடிசா அரசு வெற்றிகரமாக கையாண்டது பாண்டியனின் தீவிர தலைமையால் மட்டுமே. எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ள சுகாதார உள்கட்டமைப்பு தயாராக இருப்பதை உறுதிசெய்து, இந்தப் போராட்டத்தை முன்னணியில் இருந்து வழிநடத்தினார். தொற்றுநோய்களின் போது குறைந்த உயிர் இழப்புகளைக் கண்ட சில மாநிலங்களில் ஒடிசாவும் ஒன்றாகும். ஒடிசா நாட்டில் மிகப்பெரிய கோவிட் மருத்துவமனையை மிகக்குறைவான நேரத்தில் உருவாக்கி, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் ஆக்ஸிஜனை வழங்கி அதன் மூலம் லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியது.
தற்போது உயர்நிலைப் பள்ளி மாற்றத் திட்டத்தின் கீழ் 6500க்கும் மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகள் மாற்றப்பட்டுள்ளன. எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையானது நாட்டிலேயே மிகப் பெரியதாக இருக்கும் எய்ம்ஸ் பிளஸ் வகை சுகாதார நிறுவனமாக மாறுகிறது. ஹெரிடேஜ் காரிடார் திட்டம் முடிவடைந்ததன் மூலம் பூரி ஒரு முக்கியமான ஆன்மீக ஸ்தலமாகத் தயாராகி வருகிறது. ஒடிசா மாநில அரசின் முயற்சியால் பூரி நகரம் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தையும் பெறப் போகிறது. புவனேஸ்வர் இன்று கிழக்கு இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப மையமாக மாறியுள்ளது. வரும் ஆண்டுகளில் செமிகண்டக்டர் மையமாக முக்கிய பங்கு வகிக்கப் போகிறது புவனேஸ்வர். மேக் இன் ஒடிசா கான்க்ளேவ் 10 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டு நோக்கங்களைக் கண்டது - இது நாட்டிலேயே ஒரு மாநிலம் பெறும் மிகப்பெரிய அளவிலான முதலீடாகும். தொழில்துறைக்கு ஆதரவான கொள்கைகள் ஒடிசா மாநிலத்தை இந்தியாவின் உற்பத்தித் தலைநகராக மாற்றியுள்ளன. மக்கள் நலனுக்கான ஒடிசா அரசின் முயற்சிகள் மத்திய அரசு மற்றும் சர்வதேச நிறுவனங்களால் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன.

ஒடிசா மாநிலத்தை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்வதில் முக்கிய பங்காற்றிய ஒருவர் உண்டு என்றால், அது வி.கே.பாண்டியனைத் தவிர வேறு யாருமில்லை. முதல்வர் நவீன் பட்நாயக்கின் 5T செயலர் வி.கே.பாண்டியன் மீதான நம்பிக்கையின் விளைவாக மாநிலம் அனைத்து வகைகளிலும் வளர்ச்சியை துரிதப்படுத்தியுள்ளது. பல்வேறு இடங்களுக்குச் சென்ற வி.கே.பாண்டியன் மீது மக்கள் தன்னெழுச்சியாக அன்பும் பாசமும் பொழிவது, அவர் வாக்குறுதிகளை நிறைவேற்றும் தலைவராக அவர்கள் அவரைப் பார்க்கிறார்கள் என்பதையே வெளிப்படுத்துகிறது.
வி.கே.பாண்டியன் எப்போதுமே சாமானியர்களிடம் அதிக ஈடுபாடு கொண்டவர். குழந்தைகள் மற்றும் மாணவர்கள் மீதான அவரது அன்பை அவர் அவர்களுடன் நேரத்தை செலவிடுவதை அவர் ஆய்வுகளுக்குச் செல்லும் போது காணலாம். அவர் ஒரு விளையாட்டு வீரராகவும் இருந்தவர் என்பதால், அவர் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பான திட்டங்களை முன்னெடுப்பததோட, அவர்களுடன் தொடர்ந்து உரையாடி வருகிறார். ஒடிசாவை நாட்டின் விளையாட்டு மையமாக மாற்றியது விளையாட்டுகள் மீதான அவரது அன்பின் மற்றொரு அம்சமாகும்.

முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா அரசின் ஒவ்வொரு வளர்ச்சிக்கான திட்டங்களிலும் சாமானிய மக்களே பிரதானமாக இருக்கிறார்கள். பாண்டியன் மாநிலத்தின் அடித்தட்டு மக்களுக்கு திட்டங்களின் நன்மைகளை எடுத்துச் சென்று வருகிறார். கடந்த 6 மாதங்களில் மாநிலம் முழுவதும் சென்று மக்களுடன் கலந்துரையாடினார் பாண்டியன். மக்களின் வீட்டு வாசலில் சென்று குறைகளை கேட்டறிந்தார். குறைகேட்பு நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான மக்கள் அவரைச் சந்தித்தனர். மாவட்டங்களுக்குச் சென்ற அவர் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறைகளை பெற்றுள்ளார். 5டி முயற்சிகளால் கிட்டத்தட்ட தொண்ணூறு சதவீதத்திற்கும் அதிகமான குறைகள் தீர்க்கப்பட்டுள்ளன.
வி.கே.பாண்டியன் மக்களின் நலனுக்காக ஆற்றிய பணிகளுக்காக ஒடிசா மக்கள் அவரை மிகவும் நேசிக்கின்றனர். சாமானியர்கள் அவரை நம்புகிறார்கள், அவர் உண்மையான வளர்ச்சியைக் கொண்டுவரக்கூடியவர் என்பதை அறிந்திருக்கிறார்கள். வி.கே.பாண்டியன் நடத்திய குறைகேட்பு நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கானோர் கலந்துகொண்டதே, அம்மக்கள் அவர் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை நிரூபிக்கிறது.

5T முன்முயற்சிகள் மற்றும் நபின் ஒடிஷாவின் தலைவராக அவர் இன்று ஒரு புதிய பயணத்தைத் தொடங்குகையில், மாநிலம் மற்றொரு சுற்று வேகமான வளர்ச்சியைக் காணப் போகிறது என்பது உண்மை. 5T முன்முயற்சிகள் ஒடிசா அரசாங்கத்தின் மாற்றத்திற்கான முயற்சிகளின் முக்கிய அம்சமாக இருக்கப் போகிறது. நபின் ஒடிஷா திட்டம் அடிமட்ட அளவிலான வளர்ச்சியைக் கொண்டுவரப் போகிறது. ஒவ்வொரு மட்டத்திலும், வலுவான ஒடிசாவை உருவாக்கி, பொருளாதார சக்தியை மேம்படுத்தி, 21ஆம் நூற்றாண்டின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப, Future Ready குடிமக்களை உருவாக்கும் கல்வி முறையை செயல்படுத்தி, பாண்டியன் ஆற்றிய தலைமை வேறு யாராலும் செய்ய முடியாதது.
ஒரு தனிமனிதனாக, பாண்டியன் மிகவும் எளிமையான ஆளுமையாக இருந்து வருகிறார். மக்களின் நலனுக்காக புதிய உத்திகளை வகுக்க அவரது கோ கெட்டர் மனப்பான்மை அவருக்கு உதவுகிறது. முதலில் அவர் சிவில் சர்வீசஸில் பஞ்சாப் கேடரைப் பெற்றிருந்தார், ஆனால் தற்போதைய மிஷன் சக்தி செயலாளரான சுஜாதா ரௌத் உடனான திருமணத்திற்குப் பிறகு, அவர் ஒடிசாவை தனது இடமாகத் தேர்ந்தெடுத்தார். ஆம், ஒடிசா மாநிலத்தின் மருமகன் வி.கே.பாண்டியன். அவரது வருகையின் போதெல்லாம் ஒடிசா மாநிலத்தின் மூலை முடுக்குகளில் உள்ள மக்கள் காட்டும் அதீத அன்பும் பாசமும் அவர் மக்கள் மத்தியில் எவ்வளவு பிரபலம் என்பதை காட்டுகிறது. சமீபத்தில் கேந்திரபாரா சென்றிருந்த வி.கே.பாண்டியனுக்கு மாவட்டத்தின் மருமகன் என்ற முறையில் அம்மக்கள் அளித்த பாரம்பரிய வரவேற்பும் அவருக்கும் பொதுமக்களுக்கும் இடையே உள்ள பிணைப்பை இன்னும் இன்னும் வலுப்படுத்துகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications