45 பேர் கருகிய வோல்வோ பஸ் விபத்து: டிரைவருக்கு டபுள் ட்யூட்டி, பஸ்ஸில் பட்டாசுகள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் இருந்து ஹைதராபாத் சென்ற வோல்வோ பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 45 பேர் உடல் கருகி பலியாகினர். அந்த பேருந்தை ஓட்டியவர் ஓய்வின்றி வேலை பார்த்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதி வோல்வோ பேருந்து ஒன்று பெங்களூரில் இருந்து ஹைதராபாத் கிளம்பியது. அந்த பேருந்து ஆந்திர மாநிலம் மஹபூப்நகரில் சென்று கொண்டிருக்கையில் மீடியானில் இடித்து டீசல் டேங்க் தீப்பிடித்தது. தீ மளமளவென பேருந்தில் பரவியதில் தீபாவளி கொண்டாட ஊருக்கு சென்ற 45 பேர் உடல் கருகி பலியாகினர்.

Volvo bus fire probe reveals driver was on double duty

இந்த சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்த பேருந்தை ஓட்டிய டிரைவருக்கு டபுள் ட்யூட்டி போட்டதால் அவர் ஓய்வின்றி உழைத்தது தெரிய வந்துள்ளது. அவருக்கு ஓய்வில்லாததால் களைப்பாக இருந்த அவரால் பிரேக்கை கண்டுபிடிக்க முடியாமல் போனதாம். மேலும் பேருந்துக்குள் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்திருக்கின்றன.

இந்த சம்பம் நடந்த 2 வாரத்திற்குள் பெங்களூரில் இருந்து மும்பைக்கு சென்ற வோல்வோ பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 7 பேர் பலியாகினர். இந்த விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+