இடைத்தேர்தல் விறுவிறுப்பு: அஸ்ஸாமில் 47 % உ.பியில் 33% வாக்குப்பதிவு
லக்னௌ: குஜராத் மாநிலம் வதோதரா, உத்தரப்பிரதேச மாநிலம் மைன்புரி, தெலங்கானா மாநிலம் மேடக் ஆகிய மூன்று லோக்சபா தொகுதிகளுக்கும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 33 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் நடைபெற்று வரும் இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்துள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டு வெற்றி பெற்று ராஜினாமா செய்த வதோதரா தொகுதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் ராஜினாமா செய்த மைன்புரி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ராஜினாமா செய்த மேடக் ஆகிய மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

33 சட்டசபைத் தொகுதிகள்
இதைத் தவிர, உத்தரப் பிரதேசத்தில் 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும், குஜராத் மாநிலத்தில் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், வடகிழக்கு மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கும், ராஜஸ்தான் மாநிலத்தில் 4 தொகுதிகளுக்கும், மேற்குவங்கத்தில் 2 தொகுதிகளிலும், சத்தீஸ்கர், தெலங்கானா மாநிலங்களில் தலா ஒரு பேரவைத் தொகுதியிலும் இடைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

உ.பியில் 33%
காலையில் மந்தமாக இருந்த வாக்குப்பதிவு நேரம் செல்லச்செல்ல விறுவிறுப்படைந்தது. மதியம் 1 மணி நிலவரப்படி உ.பி.யில் 33 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஆந்திராவில் 30%
சத்தீஸ்கரில் 40 சதவீத வாக்குகளும், ஆந்திராவில் 30 சதவீத வாக்குகளும் பதிவாகியிருந்தன.

அஸ்ஸாமில் 47
அஸ்ஸாம் சில்சார், லக்கிபூர், ஜமுனாமுக் ஆகிய சட்டசபைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் 25 வேட்பாளர்களில் களத்தில் இருந்தனர். இங்கு காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது. மதியம் 1 மணி நிலவரப்படி 47 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஒட்டு எண்ணிக்கை
டெல்லியல் 3 பாஜக எம்.எல்.ஏக்கள் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டதால் 3 தொகுதிகள் காலியாக உள்ளன. அங்கு சட்டசபையை கலைப்பது தொடர்பான முடிவு இழுபறியில் இருப்பதால் டெல்லியில் இடைத்தேர்தல் நடத்தப்படவில்லை. 16-ஆம்தேதி (செவ்வாய்க்கிழமை) ஓட்டு எண்ணிக்கை தொடங்கி அன்றே முடிவுகள் வெளியாகும்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications