தமிழகத்தில் 17 தொகுதிகளில் 'யாருக்கு வாக்களித்தோம்' என்பதை அறியும் வசதி அறிமுகம்
டெல்லி: தமிழகத்தில் 17 சட்டசபை தொகுதிகளில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிவதற்கான வசதியுடன் கூடிய வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் கேரளா சட்டசபைகளுக்கு ஒரே கட்டமாக மே 16-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அஸ்ஸாமில் 2 கட்டமாக, மேற்கு வங்கத்தில் 6 கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த வாக்குகள் அனைத்து மே 19-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தல்களில் வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதைத் தெரிவிக்கும் முறை பல தொகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கடந்த முறை சென்னை ஆர்.கே. நகர் சட்டசபை இடைத்தேர்தலில் இந்த இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. வாக்குப் பதிவு இயந்திரத்தில் நாம் வாக்களித்ததும் ஒரு அச்சிட்ட காகிதம் வெளியே வரும். அதில் நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பது பதிவாகி இருக்கும். இந்த சீட்டை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது. குறிப்பிட்ட கால இடைவெளியில் அந்தச் சீட்டு அருகே உள்ள பெட்டிக்குள் விழுந்துவிடும். இது வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரம் என அழைக்கப்படுகிறது.

தற்போது நடைபெற உள்ள தேர்தலில் தமிழகத்தில் 17 தொகுதிகளில் இந்த வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரம் அறிமுகப்படுத்த உள்ளது. இதேபோல் அஸ்ஸாமில் 10, கேரளாவில் 12, மேற்கு வங்கத்தில் 22, புதுச்சேரியில் 3 தொகுதிகளிலும் இந்த வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரம் பயன்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் சரிபார்ப்பு இயந்திரம் பயன்படுத்தப்படும் 17 தொகுதிகள்:
அண்ணா நகர்
வேலூர்
கிருஷ்ணகிரி
சேலம் (வடக்கு)
ஈரோடு( மேற்கு)
திருப்பூர் (வடக்கு)
கோவை (வடக்கு)
திண்டுக்கல்
திருச்சி (மேற்கு)
கடலூர்
தஞ்சாவூர்
காஞ்சிபுரம்
விழுப்புரம்
மதுரை (கிழக்கு)
தூத்துக்குடி
திருநெல்வேலி
கன்னியாகுமரி
புதுச்சேரியில் உப்பளம், உருளையாம்பேட்டை, காரைக்கால் தெற்கு ஆகிய தொகுதிகளில் இந்த இயந்திரம் பயன்படுத்தடும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications