ம.பி. பாஜக அரசை உலுக்கும் "வியாபம்": 47வது மர்ம மரணம்..பெண் போலீஸ் அதிகாரி 'தற்கொலை'?
போபால்: மத்திய பிரதேச ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசை 'வியாபம்' முறைகேடும் இந்த ஊழலில் தொடர்புடைய நபர்களின் மர்ம மரணங்களும் நாள்தோறும் உலுக்கி எடுத்து வருகிறது. இந்த நிலையில் "வியாபம் " மூலம் போலீசில் சேர்ந்த பயிற்சி பெண் சப் இன்ஸ்பெக்டர் அனாமிகா குஷ்வாகா, ஏரியில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச தொழில்முறை தேர்வு வாரியமான வியாபம் என்கிற வாரியத்தின் மூலம் அரசுப் பணிகளுக்கான தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதாகவும், பலரும் பணம் கொடுத்து எளிதில் அரசு வேலை வாய்ப்பு பெறுவதாகவும் குற்றச் சாட்டு எழுந்தது.

இது குறித்து விசாரணை செய்ததில் இதில் பல்லாயிரம் கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்ததும், அதில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட ஏராளமானோருக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வியாபம் ஊழல் குறித்து விசாரணை மாநில அரசு நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வந்தது. இந்த விசாரணையின் போது முறைகேட்டில் ஈடுபட்டோர், ஆதாயமடைந்தோர் என ஆயிரக்கணக்கானோர் சிக்கினர்.
அதே நேரத்தில் இந்த முறைகேட்டில் சிக்கிய பலரும் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணமடைந்தும் வருகின்றனர். இதில் அம்மாநில ஆளுநரின் மகனும் அடக்கம். இதுவரை 40க்கும் மேற்பட்டோர் இப்படி மர்மமான முறையில் மரணமடைந்துள்ளனர். இதனால் இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய்சிங் மனு ஒன்றைத் தாக்கல் செய்தும் உள்ளார்.
இதனிடையே சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு உதவிய ஜபல்பூர் என்.எஸ். மருத்துவ கல்லூரியின் டீன் டாக்டர் அருண் சர்மா மர்மமான முறையில் டெல்லியில் இறந்தார். அதேபோல் வியாபம் ஊழல் குறித்து செய்தி சேகரித்த டிவி டுடே குழும செய்தியாளர் அக்ஷய் சிங் நேற்று வாயில் நுரை தள்ளிய நிலையில் மர்மமாக உயிரிழந்தார்.
இந்நிலையில்தான் "வியாபம்" மூலம் போலீசில் சேர்ந்த பயிற்சி பெண் சப் இன்ஸ்பெக்டர் அனாமிகா குஷ்வாகா மர்மமான முறையில் ஏரியில் இன்று பிணமாக கிடந்தார். அவரது உடலைக் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாள்தோறும் வியாபம் மர்ம மரணங்கள் தொடர்வது மத்திய பிரதேசத்தில் பெரும் பீதியை கிளப்பி வருகிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா!












Click it and Unblock the Notifications