Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த 10 காரணங்களுக்காக மட்டுமே வக்பு சட்ட திருத்த மசோதா.. மத்திய அரசின் விளக்கம் இதுதான்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுவதும் பெரும் விவாதத்துக்குள்ளாகி இருக்கும் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா 10 காரணங்களுக்காகவே கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

வக்பு (வக்ஃப்) என்றால் என்ன?

வக்பு ('வக்ஃப்') என்ற கருத்து இஸ்லாமிய சட்டங்கள் மற்றும் மரபுகளில் அமைந்ததாகும். இது மசூதிகள், பள்ளிகள், மருத்துவமனைகள் அல்லது பிற பொது நிறுவனங்களைக் கட்டுவது போன்ற தொண்டு அல்லது மத நோக்கங்களுக்காக ஒரு இஸ்லாமியர் தொடங்கிய அறக்கட்டளையைக் குறிக்கிறது. ஒரு வக்ஃபின் மற்றொரு வரையறுக்கும் அம்சம் என்னவென்றால், அது பிரிக்க முடியாதது - அதாவது அதை விற்கவோ, பரிசளிக்கவோ, பரம்பரை அல்லது வில்லங்கம் செய்யவோ முடியாது. எனவே, ஒரு சொத்து வக்ஃபிடமிருந்து அதாவது வக்ஃபைப் படைத்தவரிடமிருந்து பெறப்பட்டவுடன், அது இறைவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இஸ்லாமிய நம்பிக்கையின்படி இறைவன் என்றும் நிலைத்திருப்பதால் 'வக்ஃப் சொத்தும்' அவ்வாறே அமைந்துள்ளது.

வக்பு (வக்ஃப்) (திருத்த) மசோதா பின்வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது –

1. வக்பு (வக்ஃப்) சொத்து நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாமை

2. முழுமையற்ற ஆய்வுகள் மற்றும் வக்ஃப் நிலப் பதிவுகளின் பிறழ்வு

3. பெண்களின் பரம்பரை உரிமைகளுக்கு போதுமான ஏற்பாடுகள் இல்லாமல் இருத்தல்

4. ஆக்கிரமிப்பு உள்ளிட்ட நீண்ட கால வழக்குகள் ஏராளம். 2013-ம் ஆண்டு 10,381 வழக்குகள் நிலுவையில் இருந்தன. வழக்குகள் தற்போது 21,618 ஆக அதிகரித்துள்ளன.

5. வக்ஃப் வாரியங்கள் தாங்களாகவே விசாரித்து எந்த ஒரு சொத்தையும் வக்ஃப் நிலமாக அறிவிக்கும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத அதிகாரம்.

6. அரசு நிலம் தொடர்பான ஏராளமான சர்ச்சைகள் வக்ஃப் என அறிவிக்கப்பட்டுள்ளன.

7. வக்ஃப் சொத்துக்களின் சரியான கணக்கு மற்றும் தணிக்கை இல்லாமை.

8. வக்ஃப் நிர்வாகத்தில் நிர்வாகத் திறமையின்மை. '

9. அறக்கட்டளை சொத்துக்களை முறையற்று நடத்துதல்.

10. மத்திய வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் பங்குதாரர்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் இல்லாமை.

வக்ஃப் (திருத்த) மசோதா, 2025, பாரம்பரிய தளங்களைப் பாதுகாப்பதற்கும் சமூக நலனை மேம்படுத்துவதற்கும் தேவையான விதிகளுடன் வக்ஃப் சொத்துக்களின் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

1990களில் வக்பு சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டதா? எந்த ஆண்டு?

ஆம். 1995-ம் ஆண்டு வக்பு வாரிய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது.

 
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+