கடையில் நைசாக ஸ்மார்ட்போனை திருடிய பெண்: வீடியோ இதோ
டெல்லி: பெண் ஒருவர் கடையில் இருந்து ஸ்மார்ட்போன் ஒன்றை திருடியபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
பெரிய பெரிய கடைகளில் பொருட்கள் திருடு போகாமல் இருக்க பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்கள். கடைகளில் சிசிடிவி கேமராக்கள் வைக்கிறார்கள். அப்படியும் சிலர் பொருட்களை திருடிவிடுகிறார்கள்.
இந்நிலையில் வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவின் விபரம்,
பெண் ஒருவர் கடையில் செல்போன் பிரிவில் யாரும் இல்லாத நேரத்தில் ஸ்மார்ட்போன் ஒன்றை நைசாக எடுத்து வைத்துக் கொள்கிறார். அந்த பிரிவின் பொறுப்பாளர் வந்ததும் ஒன்றும் தெரியாதது போன்று பிற செல்போன்களின் விபரங்களை கேட்கிறார்.
அந்த நபருடன் பேசிக் கொண்டிருக்கையிலேயே அவருக்கு தெரியாமல் தனது கையில் இருந்த செல்போனை தான் கொண்டு வந்த பையில் போட்டு தனது கைப்பையை அதன் மேல் வைத்து மறைத்துவிடுகிறார்.
பின்னர் ஒன்றும் தெரியாதது போன்று அந்த இடத்தில் இருந்து கிளம்பிவிடுகிறார்.