படுதோல்வியால் பரிதாபம்! மேற்கு வங்க பாஜகவில் வெடித்த உட்கட்சி மோதல் - மாநில குழு செயலாளர் ராஜினாமா
கொல்கத்தா: மேற்குவங்கத்தில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக படுதோல்வியடைந்த நிலையில் அக்கட்சியில் மாநிலக் குழு செயலாளரும் எம்.எல்.ஏவுமான கௌரி சங்கர் கோஸ் தனது பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
மேற்கு வங்கத்தின் அசான்சோல் மக்களவைத் தொகுதி, பல்லிகுங்கே சட்டப்பேரவைத் தொகுதி, சத்தீஸ்கரின் கைராகர் சட்டப்பேரவைத் தொகுதி, பீகாரின் போசாஹன் சட்டப்பேரவைத் தொகுதி, மகாராஷ்டிராவின் கோலாப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்றது.
இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் மேற்கு வங்கத்தின் அசான்சோல் மக்களவைத் தொகுதி, பல்லிகுங்கே சட்டப்பேரவைத் தொகுதிகளின் முடிவுகள் உற்று நோக்கப்பட்டன.

மேற்கு வங்க அரசியல்
அதற்கு முக்கிய காரணம் அம்மாநிலத்தில் அரங்கேறிய அண்மைகால அரசியல் நிகழ்வுகள். மேற்குவங்க ஆளுநருக்கும் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கும் இடையிலான மோதல், மேற்கு வங்க அரசுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கைகள், மாநிலங்களில் ஏற்பட்ட குற்றச்செயல்களால் இந்த இடைத் தேர்தல் முடிவுகளை மாநில மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

பாஜக எம்.பி. ராஜினாமாவால் காலியான தொகுதி
இதில், அசான்சோல் மக்களவைத் தொகுதி எம்.பியாக இருந்த பாஜகவை சேர்ந்த பாடகர் பபுல் சுப்ரியோ கடந்த 2021 ஆம் ஆண்டு அக்கட்சியை விட்டு விலகினார். இதனால் அவரது எம்.பி பதவியும் பறிபோனது. இதனை தொடர்ந்து அசான்சோல் மக்களவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

சத்ருகன் சின்ஹா
இதனை தொடர்ந்து நடைபெற்ற இடைத் தேர்தலில், பாஜகவிலிருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சத்ருகன் சின்ஹா அக்கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அவரை எதிர்த்து பாஜகவை சேர்ந்த அக்னிமித்ரா பால் போட்டியிட்டார்.

திரிணாமூல் காங்கிரஸில் சீட்
அதேபோல், மேற்கு வங்க அமைச்சராக இருந்த சுப்ரதா முகர்ஜி கடந்த ஆண்டு காலமானதை தொடர்ந்து அவரது பல்லிகுங்கே சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில், பாஜகலிருந்து விலகிய பபுல் சுப்ரியோவை வேட்பாளராக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி நிறுத்தியது.

இரண்டிலும் திரிணாமூல் வெற்றி
இன்று நடைபெற்று முடிந்த வாக்கு எண்ணிக்கையில், அசான்சோல் மக்களவைத் தொகுதியில் சத்ருகன் சின்ஹா பாஜக வேட்பாளரை விட 3 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று பிரமாண்ட வெற்றிபெற்றார்.
அதேபோல் பல்லிகுங்கே சட்டப்பேரவைத் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளர் பபுல் சுப்ரியோ மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சாய்ரா ஷா ஹலிமைவிட 20,030 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். அந்த தொகுதியில் பாஜக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

பாஜகவுக்குள் கோஷ்டி பூசல்
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகியவர்களை வைத்தே பல இடங்களில் பாஜக ஆட்சியை பிடித்தது. ஆனால், தற்போது பாஜகவில் பல ஆண்டுகளாக கட்சியில் இருந்தவர்களுக்கும் வேறு கட்சிகளிலிருந்து வந்தவர்களுக்கும் இடையே உட்கட்சிப் பூசல் தொடர்ந்து வருகிறது.

பாஜக மாநிலக்குழு செயலாளர் ராஜினாமா
குறிப்பாக திரிணாமூல் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு தாவிய சுவேந்து அதிகாரியின் ஆதிக்கம் மேற்கு வங்க பாஜகவில் அதிகம் இருப்பதாக அக்கட்சியினர் கருதுகின்றனர். இந்த நிலையில், நேற்றைய இடைத்தேர்தல் முடிவுகளில் பாஜக அதிக வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து அக்கட்சியின் மாநிலக்குழு செயலாளராக இருந்து வந்த எம்.எல்.ஏ. கௌரி சங்கர் கோஷ் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார். முன்னதாக மாநிலக்குழு உறுப்பினர் பொறுப்பிலிருந்து எம்.எல்.ஏ. கஞ்சன் மிஸ்ராவும் ராஜினாமா செய்திருக்கிறார்.
-
திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ் -
சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் இல்லை? காங்கிரஸில் புது பஞ்சாயத்து! அப்போ செல்வப்பெருந்தகைக்கு? -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்!












Click it and Unblock the Notifications