டெண்டுல்கருக்கு, தான் வரைந்த ஓவியத்தை பரிசளித்தார் மம்தா!
கொல்கத்தா: கொல்கத்தாவில் இருந்து கிளம்பிய சச்சின் டெண்டுல்கருக்கு, மேங்கு வங்க முதல்வர் மம்தா தான் வரைந்த ஓவியத்தை பரிசளித்தார்.
டெண்டுல்கரின் 199வது டெஸ்ட் கிரிக்கெட் கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டனில் கடந்த 6 ஆம் தேதி தொடங்கியது. இதில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றதையடுத்து நேற்று போட்டி முடிந்தது. போட்டி முடிந்த பின் சச்சின் டெண்டுல்கருக்கு வழியனுப்பும் விழா நடைபெற்றது.

இதில், மேற்கு வங்க முதல்வர் மம்தா கலந்து கொண்டு, சச்சினுக்கு தன் கையால் வரைந்த ஓவியத்தை பரிசாக வழங்கினார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், வீரருமான கங்குலி, சச்சின் டெண்டுல்கருக்கு தலைப்பாகை சூட்டி, கட்டிபிடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படைத்தினார்.
மேலும், கொல்கத்தா போலீஸ் கமிஷனர் சுராஜித், துர்கா சிலையை வழங்கினார். மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவர் ஜக்மோகன் டால்மியா, தெண்டுல்கருக்கு 199 தங்க இலைகளை கொண்ட ஆலமரத்தின் நடுவில், டாஸ் போட்ட தங்க நாணத்தை வைத்து பரிசளித்தார்.












Click it and Unblock the Notifications