முதலிரவு வேண்டாம்! மனைவி பேச்சை கேட்டு தனியாக படுத்த புதுமாப்பிள்ளைக்கு நேர்ந்த கதி.. அய்யோ போச்சே
ஜெய்ப்பூர்: ‛‛இன்று முதலிரவு வேண்டாம். எங்களின் பாரம்பரியப்படி கணவனும், மனைவியும் முதலிரவில் தாம்பத்தியத்தில் ஈடுபடக்கூடாது'' என புதுப்பெண் கூறியதை நம்பிய இளைஞர் தனியாக படுத்தார். அதன்பிறகு அதிகாலை 3 மணியளவில் கண்விழித்தபோது அந்த மாப்பிள்ளைக்கு அதிர்ச்சி காத்திருந்தது. நகை, பணத்தை எடுத்து கொண்டு புதுப்பெண் வீட்டைவிட்டு எஸ்கேப் ஆன நிலையில் அதுபற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கிஷான்கார்க் பகுதியை சேர்ந்தவர் 32 வயது இளைஞர். இவருக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது. பல இடங்களில் மணப்பெண் தேடினர். ஆனால் மணப்பெண் அமையவில்லை. இதற்கிடையே தான் ஜிதேந்திரா என்பவர் அந்த இளைஞரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டார்.

அப்போது தன்னை திருமண புரோக்கர் என்று அறிமுகம் கொண்டார். அதோடு ஆக்ராவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் உள்ளார். சம்மதம் தெரிவித்தால் திருமணம் செய்து வைப்பதாக நம்பிக்கையளித்தார். இளைஞரின் வீட்டினரும் மணப்பெண் கிடைக்காத விரக்தியில் இருந்ததால் அவர்கள் கண்மூடித்தனமாக ஜிதேந்திராவை நம்பினர்.
இதையடுத்து ஜிதேந்திரா சுமார் 27 வயது நிரம்பிய பெண் ஒருவரை அறிமுகம் செய்தார். இளைஞரின் குடும்பத்துக்கு அந்த பெண் பிடித்துப்போனது. திருமண ஏற்பாடுகள் தொடங்கியது. ஜிதேந்திரா ரூ.2 லட்சத்தை கமிஷனாக பெற்று கொண்டார். அதன்பிறகு இருவரின் திருமணமும் ஜெய்ப்பூரில் கோலகலாமாக நடந்தது. இளைஞரின் சம்பிரதாய முறைப்படி திருமணம் நடந்தது. அறுசுவை உணவுகளுடன் திருமண விழா சிறப்பாக முடிவடைந்தது.
அதன்பிறகு கிஷான்கார்க் பகுதிக்கு புதுமண ஜோடி வந்தனர். முதலிரவில் இளைஞரும், இளம்பெண்ணும் தங்களின் ‛பெட்ரூம்' சென்றார். அப்போது அந்த இளம்பெண், ‛‛இன்று முதலிரவு வேண்டாம். நாம் இருவரும் இன்று ஒன்றாக படுக்கையை பகிர வேண்டாம். எங்களின் பாரம்பரியப்படி முதலிரவில் கணவன் - மனைவி சேர்ந்து இருக்க கூடாது'' என்றார். இதனை மாப்பிள்ளை பெரிதாக எடுக்கவில்லை. இருவரும் ஒரே அறையில் தனித்தனியாக படுத்து கொண்டனர்.
சுமார் 3 மணியளவில் திடீரென்று மாப்பிள்ளைக்கு தாகம் எடுத்தது. தண்ணீர் குடிக்க அவர் கண்விழித்தார். அப்போது தான் அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது தனது அறையில் தனியாக படுத்து கிடந்த மனைவியை காணவில்லை. அவரை வீடு முழுவதும் தேடிப்பார்த்தார் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி வீட்டில் இருந்த நகை, பணமும் மாயமாகி இருந்தது. இதனால் மனைவி தான் பணம், நகையை எடுத்து கொண்டு எஸ்கேப் ஆகியிருக்க வேண்டும் என்று நினைத்தார்.
உடனடியாக அந்த இளைஞர் பஸ் நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்டவற்றில் தனது குடும்பத்தினருடன் தேடினார். அங்கு அவர் இல்லை. அதேபோல் திருமண புரோக்கர் ஜிதேந்திராவை தொடர்பு கொள்ள முயன்றும் முடியவில்லை. இதனால் இருவரும் சேர்ந்து தான் மோசடி செய்திருப்பதாக இளைஞரின் குடும்பத்தினர் நினைத்தர். இதுபற்றி மதன்கஞ்ச் போலீசில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து புதுப்பெண் மற்றும் திருமண புரோக்கர் ஜிதேந்திரா ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் இளைஞரின் குடும்பத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications