மனிதர்களாக நாம் தோற்றுவிட்டோம்.... சிறுமிக்கு நீதி மறுக்கப்படாது - விகே சிங்
சிறுமி விவகாரத்தில் நாம் மனிதர்களாக தோற்றுவிட்டோம், ஆனால் அவருக்கு நீதி மறுக்கப்படாது, என்று மத்திய அமைச்சர் விகே சிங் கூறி உள்ளார்.
Recommended Video

டெல்லி: காஷ்மீர் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் நாம் மனிதர்களாக தோற்றுவிட்டோம், ஆனால் அவருக்கு நீதி மறுக்கப்படாது என்று மத்திய அமைச்சர் விகே சிங் கூறி உள்ளார்.
ஜம்மு- காஷ்மீரின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்யபட்டு கொலை செய்யப்பட்டார். இதற்கு பலரும் நீதி கேட்டு போராடி வருகின்றனர். ஹேஸ்டேக் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

ஜம்முவின் கத்துவா பகுதியில் உள்ளது கசானா என்ற கிராமம். கடந்த ஜனவரி 10 அன்று 8 வயது சிறுமி தனது வீட்டுக் குதிரையை, அருகில் உள்ள குளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். அதன் பிறகு அச்சிறுமி வீடு திரும்பவில்லை. இது குறித்து சிறுமியின் பெற்றோர் ஹிராநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனையடுத்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
8 நாட்களுக்குப் பிறகு சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் அச்சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
உடல் முழுவதும் கடுமையான காயங்களும் பல இடங்களில் தீக்காயங்கள் இருந்ததும் தெரியவந்தது. சிறுமிக்கு மயக்கமருந்து கொடுத்து, சிறை வைக்கப்பட்டு கொடூரமான முறையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
விசாரணையில் ஹிராநகர் காவல் நிலையத்தின் சிறப்பு காவல்துறை அதிகாரியான கஜூரியா கைது செய்யப்பட்டுள்ளார். இது மதம் சார்ந்த பிரச்சினையாக மாறி விட்டது. குற்றவாளியை விடுவிக்க கோரி போராட்டமும் பேரணியும் நடத்தப்பட்டுள்ளது. இதில் பாஜக கொடியை ஏந்தி அமைச்சர்கள் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கத்துவா கொடூரச் சம்பவம் தொடர்பாக மத்திய அரசும் பாஜகவினரும் மவுனம் சாதித்து வரும் நிலையில் மத்திய இணை அமைச்சர் விகே சிங் கருத்தை பதிவு செய்து உள்ளார். "சிறுமி விவகாரத்தில் நாம் மனிதர்களாக தோற்றுவிட்டோம், ஆனால் அவருக்கு நீதி மறுக்கப்படாது," என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாலிவுட் நட்சத்திரங்கள் பொதுமக்கள் சார்பில் சிறுமிக்கு நீதிகேட்டு ட்விட்டரில் பதிவிடப்பட்டு வருகின்றன.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications