ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம்: சோனியா காந்தி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறோம் என காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

We will introspect into the reasons for our loss, Sonia

அதன்படி கேரளா, அஸ்ஸாம் மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ளது காங்கிரஸ், தமிழகம், மேற்கு வங்கத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிலான வெற்றியை காங்கிரஸ் கட்சியால் பெற முடியவில்லை.

இந்நிலையில், சட்டசபை தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா, சட்டசபை தேர்தல் நடந்த தமிழ்நாடு, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் மக்களின் தீர்ப்பை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறோம்.

இந்த தேர்தலில் நம் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய வாக்காளர்கள் மற்றும் பிரச்சாரம் செய்த காங்கிரஸ் தொண்டர்களுக்கும், அதன் நிர்வாகிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுக்கு ஆட்சி அமைக்க பெரும்பான்மையை அளித்த புதுச்சேரி மக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

எங்கள் தோல்விக்கான காரணங்கள் மீது சுயபரிசோதனை செய்வதுடன், அதை சரிசெய்து பொதுமக்களுக்கு புதியவேகத்துடன் சேவை செய்வோம். வெற்றி பெற்ற கட்சிகளின் தலைவர்களுக்கு எனது வாழ்த்துக்களை வழங்குகிறேன். இவர்கள், நல்லாட்சி மற்றும் வளர்ச்சியை தொடர்ந்து வழங்குவதை தங்கள் முக்கியக் அரசியல் குறிக்கோளாக இருக்கட்டும். எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+