மேற்கு வங்கம்: நாளை 3வது கட்ட தேர்தல்- 31 தொகுதிகளில் வாக்குப்பதிவு- பலத்த பாதுகாப்பு
கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நாளை 3-வது கட்டமாக 31 சட்டசபை தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதனையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களின் சட்டசபைகளுக்கான தேர்தல் நாளை ஏப்ரல் 6-ந் தேதியன்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. அஸ்ஸாம், மேற்கு வங்கத்தில் பல கட்டங்களாக தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

மேற்கு வங்கத்தில் ஏற்கனவே 2 கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது. 3-வது கட்டமாக 31 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அஸ்ஸாமிலும் நாளை 3-வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறும்.
மேற்கு வங்கத்தின் ஹவுரா, ஹூக்ளி, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டங்களில் நாளை வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 78 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர். 10,871 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே மேற்கு வங்கத்தில் கொந்தளிப்பான நிலை காணப்படுகிறது. இதனால் நாளை வாக்குப் பதிவு நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications