தடை பற்றிய தகவல் வெளியாகும் முன்பே, வங்கியில் கோடிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்ததா மே.வங்க பாஜக?
கொல்கத்தா: ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவிப்பதற்கு முன்பே மே.வங்க பாஜக 3 கோடி ரூபாய் பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
500,1000 ரூபாய் நோட்டுகள் என அறிவிப்பதற்கு முன்பே அந்த செய்தியை பா.ஜ.க தனது நண்பர்களுக்கு ரகசியமாக தெரிவித்து விட்டதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் மோடியின் ரூபாய் நோட்டு குறித்து அறிவிப்பு வெளியாவதற்கு 8 நாட்களுக்கு முன்பே , மேற்கு வங்க பாஜக 3 கோடி ரூபாயை வங்கியில் செலுத்தியதாகவும், அறிவிப்பு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு 40 லட்சம் ரூபாய் வங்கியில் டெபாசிட் செய்ததாக மார்க்சிஸ்ட் கட்சியின் ஜனசக்தி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
இதனை இந்தியன் வங்கி உறுதி செய்துள்ளதாகவும் அந்த நாளேடு தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த 8ஆம் தேதி பிற்பகல் பாஜக வங்கி கணக்குக்கு (எண் 554510034 ) முதற்கட்டமாக 60 லட்சம் ரூபாய் செலுத்தப்பட்டதாக கூறியுள்ளது.
இதைத்தொடர்ந்து மோடி தொலைக்காட்சிகளில் பேசுவதற்கு முன்பாக 8 மணியளவில் இரண்டாம் கட்டமாக 40 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என்றும் அவை முழுவதும் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் என்றும் கூறும் ஜனசக்தி, 8 மணி வரை வங்கி எப்படி திறந்திருந்தது என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும் நவம்பர் ஒன்றாம் அந்தக் கணக்கில் 75 லட்சம் ரூபாயும் 5ஆம் தேதி ஒன்றேகால் கோடி ரூபாயும் டெபாசிட் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோடியின் ரூபாய் நோட்டு குறித்த அறிவிப்பை பாஜகவினர் முன்கூட்டியே தெரிந்திருந்ததால் தான் கறுப்பு பணத்தை வெள்ளையாக்க வங்கியில் செலுத்தியுள்ளனர் என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சூரிய காந்த மிஷ்ரா குற்றம் சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications