மேற்கு வங்கத்தில் நாளை 2ஆம் கட்ட தேர்தல்! நாளை மாலை 5 மாநில Exit poll கருத்துக்கணிப்புகள் வெளியாகும்

Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: மேற்கு வங்​கத்​தில் 2ஆம் கட்ட தேர்தலுக்கான இறுதிக்கட்ட தேர்​தல் பிரச்சா​ரம் நேற்​றுடன் முடிவடைந்​தது. அங்கு 142 தொகு​தி​களில் நாளை வாக்​குப்​ப​திவு நடை​பெறுகிறது. நாளை மாலை வாக்குப்பதிவு முடிந்ததும், தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்​கம் ஆகிய 4 மாநிலங்​கள், புதுச்​சேரி யூனியன் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தேர்​தலுக்கு பிந்​தைய கருத்​துக்​ கணிப்​பு​கள்​ வெளியாகின்​றன.

மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23, 29 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேற்கு வங்கத்தில் மொத்​தம் 294 தொகு​தி​கள் உள்​ளன. இவற்​றில் 152 தொகு​தி​களுக்கு கடந்த 23 ஆம் தேதி முதல் கட்ட தேர்​தல் நடை​பெற்​றது. மொத்​தம் 1,478 வேட்​பாளர்​கள் களத்​தில் உள்​ளனர். 3.60 கோடி பேர் வாக்​குரிமை பெற்று உள்​ளனர். அவர்​களுக்​காக 44,376 வாக்​குச்​சாவடிகள் அமைக்கப்​பட்​டிருந்​தன. காலை 7 மணிக்கு வாக்​குப்​ப​திவு தொடங்​கியது. அனைத்து வாக்​குச்​சாவடிகளி​லும் காலை முதலே பொது​மக்​கள் நீண்ட வரிசை​யில் காத்​திருந்து வாக்​களித்தனர். முதல்கட்டத் தேர்தலில் 93.19 சதவீத வாக்​கு​கள் பதி​வாகின.

west bengal assembly election 2026 2026

இந்நிலையில், மீதம் உள்ள 142 தொகு​தி​களில் நாளை இறுதிக்கட்ட தேர்​தல் நடை​பெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தலுக்காக, மொத்தம் 41,001 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில், 3.24 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட தகுதி உடையவர்கள். இதில் ஆண்கள், 1.64 கோடி; பெண்கள், 1.57 கோடி. அங்கு ஆளும் திரிணாமூல் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுகின்றன. இந்​நிலை​யில் அங்கு இறு​திக்​கட்ட தேர்தல் பிரச்​சா​ரம் நேற்​றுடன் நிறைவு பெற்​றது.

மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட தேர்தலை முன்னிட்டு, தேர்தல் பணியாளர்கள் வாக்குச்சாவடிகளை நோக்கிப் பயணிக்க தொடங்கியுள்ளனர். இதில், வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலி சட்டமன்ற தொகுதியின் தொலைதூர ஆற்று பகுதிகளும் அடங்கும் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) தெரிவித்தது.

"அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துவிட்டன. இந்திய தேர்தல் ஆணையத்தின் வாக்குப்பதிவு குழுக்கள் தத்தமது வாக்குச்சாவடிகளை நோக்கி பயணித்து வருகின்றன. மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தில் உள்ள 123-சந்தேஷ்காலி சட்டமன்ற தொகுதியின் ஆற்று பகுதிகளை சென்றடைய, அவர்கள் படகுகள் மூலம் ஆறுகளை கடந்து செல்கின்றனர்," என்று இந்தியத் தேர்தல் ஆணையம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

முன்னதாக, மேற்கு வங்கத்தின் தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ் குமார் அகர்வால், மக்கள் அனைவரும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்யுமாறு வலியுறுத்தினார். "அனைவரும் வாக்களிக்க அனுமதிப்பதே இந்திய தேர்தல் ஆணையத்தின் குறிக்கோள். உங்கள் அனைவரையும் உங்கள் வாக்குச்சாவடிகளுக்கு சென்று உங்கள் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும். எங்கு வன்முறை சம்பவங்கள் பதிவானாலும், அங்கு நாங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.

நாங்கள் அனைத்து சவால்களையும் எதிர்கொள்வோம். உயரமான கட்டிடங்களில் வசிப்போர் குறித்த பட்டியலை நாங்கள் பெற்றுள்ளோம். அவர்களில் பெரும்பாலானோர் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த உயரமான கட்டிடங்களுக்குள்ளேயே சில வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+