கொரோனா வைரஸ் எதிரொலி: பூடான் எல்லையை மூடியது மேற்கு வங்க அரசு
கொல்கத்தா: இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பூடான் எல்லையை மேற்கு வங்க அரசு மூடிவிட்டதாக அந்த மாநில மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Recommended Video
சீனாவில் ஒரு ரவுண்ட் வலம் வந்த கொரோனா வைரஸ் இந்தியா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த வைரஸால் உலகம் முழுவதும் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 83ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பாதிப்பை தடுக்க நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் பூடான் எல்லைக்கு மேற்கு வங்க அரசு சீல் வைத்தது. இதுகுறித்து மேற்கு வங்க மாநில அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில் மேற்கு வங்கத்தின் அலிபுர்துர் மாவட்டம் ஜெய்கானில் இந்தியப் பக்கத்தில் பூடான் எல்லை வாசலை மேற்கு வங்க காவல் துறை அமைத்துள்ளது.
இன்று முதல் இந்தியாவிலிருந்து பூடானுக்கு பொருட்கள் ஏற்றுமதி, பயணிகள் செல்வதற்கு வெள்ளிக்கிழமை மாலை முதல் மாநில அரசு தடை விதித்துள்ளது. கடந்த மாதம் இமயமலை அருகே ஒரு அமெரிக்க சுற்றுலாப் பயணிக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டதை அடுத்து இமயமலையின் அனைத்து வழிகளிலும் தடை விதிக்கப்பட்டுவிட்டது என்றார் அவர்.
-
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications